பட்டதாரி ஆசிரியர் தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 4, 2024

பட்டதாரி ஆசிரியர் தேர்வு

featured image

பட்டதாரி ஆசிரியர் தேர்வு
கட்டாய தமிழ் தகுதித் தேர்வில் இருந்து மொழி
சிறுபான்மையினருக்கு விலக்கு கிடையாது

சென்னை, பிப். 4- தமிழ்நாட்டில் இன்று (பிப்.4) நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மையின ருக்கு விலக்கு அளிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுதான் முடிவு எடுக்க முடியும் எனக் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வர வேற்று, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்தாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி கடந்த ஜன.7இல் நடைபெறவிருந்த கட்டாயத் தமிழ் தகுதித்தேர்வு புயல், மழை காரணமாக பிப்.4-க்கு தள்ளிவைக் கப்பட்டது. இந்த கட்டாயத் தமிழ் தகுதித்தேர்வில் 40 சதவீத மதிப் பெண்கள்பெற்று தேர்ச்சி பெற் றால் மட்டுமேபிரதான தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப் படுவர் என ஆசிரியர் தேர்வு வாரி யம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கட்டாயத் தமிழ் தகுதித்தேர்வில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கக்கோரியும், இது தொடர்பாக அரசு ஊழியர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் அரசமைப்பு சட்டத்துக்கு விரோத மானது என அறிவிக்கக் கோரியும் மொழி சிறுபான்மை விண்ணப்ப தாரர்கள் தரப்பில் உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், கடந்த 2016ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தில், அரசுப் பணிக்கு தகுதி பெற்று தமிழ் மொழியில் தகுதி பெற்றிருக்காவிட்டால், பணி நியம னத்துக்குப் பின் 2 ஆண்டுகளில் தமிழ் மொழிக்கான தகுதித் தேர் வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இதில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, போட்டித் தேர்வி லேயே தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என அறி விக்கப்பட்டுள்ளது. இது மொழி சிறுபான்மையினர் அரசு பணியை பெறுவதில் பாதிப்பு ஏற்படும். எனவேமொழி சிறுபான்மையின விண்ணப்பதாரர்கள் தமிழ் தகுதித் தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண் டும், என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதி பதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகி யோர் அடங்கிய அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப்போது மனு தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக் குரைஞர் கே.இளங்கோ, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்கள் மற்றும் மொழி சிறுபான்மையின விண்ணப்பதாரர்கள் தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்த பட்சம் ஓராண்டாவது அவகாசம் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் மற்றும் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.நீலகண்டன் ஆகியோர் இது தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டு வந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. அதன் அடிப் படையில்தான் இந்தபோட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே மனுதாரர்களின் கோரிக் கையை ஏற்கக்கூடாது என வாதிட் டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த தேர்வை 41 ஆயிரத்து 485 விண்ணப்ப தாரர்கள் எழுதவுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அது தேர்வு நடைமுறைகளை பாதிக்கும். எனவே மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று விலக்கு அளிக்க முடியாது. இதுதொடர் பாக தமிழ்நாடு அரசுதான் முடிவு செய்ய முடியும். இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியோர் வரும் மார்ச் 7-க்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment