தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் தலைமை தேர்தல் ஆணையரிடம் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 24, 2024

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் தலைமை தேர்தல் ஆணையரிடம் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை, பிப். 24- தமிழ் நாட்டில் மக்களவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண் டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். மின்னணு வாக்குப்பதிவு இயந் திரம் – கட்டுப்பாட்டு இயந்திரம் ஆகியவற்றுக்கு இடையே, விவி பாட் இயந்திரத்தை வைக்கக் கூடாது என்று திமுக, கம்யூ னிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தின.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் ஆணையர்கள் தர்மேந்திர சர்மா, நிதேஷ் வியாஸ், துணை தேர்தல் ஆணையர்கள் அஜய் பதூ, மனோஜ்குமார் சாஹு, ஊடகப்பிரிவு தலைமை இயக் குநர் பி.நாராயணன், தலைமை இணை இயக்குநர் அனுஜ் சந்தக், முதன்மை செயலர் மல்லே மாலிக் ஆகியோர் 22.2.2024 அன்று இரவு சென்னை வந்தனர்.

மீனம்பாக்கத்தில் உள்ள நட் சத்திர விடுதியில் நேற்று (23.2.2024) காலை நடந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ் நாட்டில் உள்ள அங்கீகரிக்கப் பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளை அவர்கள் சந்தித்த னர். பிற்பகலில், தேர்தல் ஏற் பாடுகள் குறித்து மாவட்ட ஆட் சியர்கள், காவல் கண்காணிப் பாளர்களிடம் கேட்ட றிந்தனர். பல்வேறு அறிவுறுத்தல்களை யும் வழங்கினர். தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு மற்றும் கூடு தல் ஆணையர்கள், இணை ஆணையர் உடன் இருந்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள 10 அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு தனித்தனி யாக நேரம் ஒதுக்கி, அவர்களது கருத்துகளை கேட்டறிந்தனர். மக்களவை தேர்தலை தமிழ் நாட்டில் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று பெரும்பாலும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர்.
இதுகுறித்து செய்தியாளர் களிடம் கட்சிகளின் பிரதிநிதிகள் கூறியதாவது:
ஆர்.எஸ்.பாரதி (திமுக): கடந்த தேர்தல்போல இல்லா மல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந் திரம் இடையே விவிபாட் இயந் திரம் வைக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இது சட்டத்துக்கு புறம்பானது.
பொதுமக்கள் அளிக்கும் வாக்கு நேரடியாக கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கு செல்வதுதான் நம்பகத்தன்மையை உருவாக்கும். இடையில் விவிபாட் இயந் திரத்தை வைப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நடை முறையால் 2 சதவீதம் வரை தவறு நடக்க வாய்ப்பு உள்ளதாக ஆணையர் களே ஒப்புக் கொள்கின்றனர். எனவே,இதை மாற்றியமைக்க வேண்டும்.
மேனாள் அமைச்சர் டி.ஜெயக் குமார் (அதிமுக): வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகளை முழுமையாக களைய வேண் டும். ஒரே குடும்பத்தினர் பல வாக்குச்சாவடிகளில் வாக்களிக் கும் நிலை உள்ளதை மாற்ற வேண்டும். பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்டறிந்து, கூடு தல் துணை ராணுவப் படை, சிசிடிவி கேமரா பயன்படுத்தி சுதந்திரமாக தேர்தல் நடத்த வேண்டும். துணை ராணுவத்தி னரை அதிகம் நியமிக்க வேண் டும். அனைத்து மாவட்டங்களி லும் தேர்தலுக்கு முன்பு ஆட் சியர்கள், காவல்துறை கண் காணிப்பாளர்கள் முதல் கீழ் நிலை வரை அதிகாரிகளை மாற்ற வேண்டும்.
கராத்தே தியாகராஜன் (பாஜக): மாநில தலைவர் அண்ணாமலை சார்பில், கடிதம் அளித்துள்ளோம். தமிழ்நாட் டில் உள்ள 68 ஆயிரம் வாக்குச் சாவடிகளும் முக்கியமானதாக இருப்பதால், கூடுதல்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வாக்குச்சாவடி, வாக்கு எண் ணிக்கை மய்யங்களில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட வேண்டும். போதிய அளவில் துணை ராணுவப்படையினரை நியமிக்க வேண்டும்.

காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவு தலைவர் சந்திரமோகன்: வாக்களிப்போருக்கு 100 சதவீதம் ஒப்புகைச் சீட்டுவழங்க வேண் டும். ஆணையம் வழங்கும் வாக் காளர் அடையாள அட்டை யுடன் வாக்களிக்கச் சென்றால், பட்டியலில் பெயர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியகுழு உறுப்பினர் பி.சம்பத்: மின்னணு வாக்குப்பதிவு இயந் திரம் தொடர்பாகமக்களுக்கு சந்தேகம் இருப்பதால்,முதலில் மின்னணு இயந்திரம், அடுத்து கட்டுப்பாட்டு இயந்திரம், தொடர்ந்து விவிபாட் இயந்தி ரத்தை வைக்குமாறு வலியுறுத்தி யுள்ளோம்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைசெயலாளர் மு.வீரபாண்டியன்: பதற்றமான சூழல் உள்ள இடங்களில் பாது காப்பை அதிகரிக்க வேண்டும். கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில்பிரச்சாரம் செய்வது, ஜாதி, மத, இனஉணர்வுகளை தூண்டுவது ஆகியவற்றை தடுக்க வேண்டும்.

தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி: வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும்.
இவ்வாறு வலியுறுத்தி உள்ள தாக அவர்கள் தெரிவித்தனர்.தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்டோர் இன்று காலை தமிழ்நாடு, கருநாடகா, கேரளா வின் தலைமை தேர் தல் அதிகாரிகள், காவல் அதிகாரி களிடம் தேர்தல் முன்னேற் பாடுகள் குறித்து கேட்டறி கின்றனர். தொடர்ந்து, தமிழ் நாடு தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உள்ளிட் டோருடன் ஆலோசனை நடத் துகின்றனர்.

No comments:

Post a Comment