எஸ்.சி.- எஸ்.டி. பின்னடைவுக்குத் தீர்வு - ஆய்வுக் குழு நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 20, 2024

எஸ்.சி.- எஸ்.டி. பின்னடைவுக்குத் தீர்வு - ஆய்வுக் குழு நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, பிப்.20 – அரசுத் துறை களில் காலியாக இருக்கும் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களின் எண்ணிக்கையை உறுதி செய் வதற்கான குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட் டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செய லர் சிவ் தாஸ் மீனா வெளியிட் டிருக்கும் உத்தரவு வருமாறு:
“அரசுத் துறைகளில் காணப் படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடை வுப் பணியிடங்கள் சிறப்பு ஆள் சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்யப்பட்டது. இது தொடர்பான அரசாணை ஏற் கெனவே வெளியிடப்பட்டது.
அதன்படி, அரசுத் துறைகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான குறைவுப் பணியிடங் களின் எண்ணிக்கை உறுதி செய் வதற்காக அரசுத் துறை உயரதிகாரி களைக் கொண்ட குழு அமைக்கப் படுகிறது.

இந்தக் குழுவின் தலைவராக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலர் க.லட் சுமி பிரியா செயல்படுவார். சட்டத் துறை இணைச் செயலர் ப.அன்புச் சோழன், மனிதவள மேலாண்மைத் துறை இணைச் செயலர் பி.ஆர்.கண் ணன் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். இந்தக் குழு குறைவுப் பணியிடங்களை துறைகள் வாரி யாக ஆய்வு செய்து, பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் தலைமைச் செயலருக்கு அறிக்கை அளிக்கும். இதற்கான ஆலோசனைக் கூட்டங் கள் தலைமைச் செயலகத்தில் பிப்ரவரி 19 முதல் 27 வரை அனைத்து வேலை நாள்களிலும் மாலையில் நடை பெறும்.
நாளொன்றுக்கு 5 அரசுத் துறை களைச் சேர்ந்த செயலர்கள் அல்லது துறைத் தலைவர்கள் கூட் டத்தில் கலந்துகொள்ள வேண்டும். கூட்டத் துக்கான பொருள், கூட்டம் நடை பெறும் தேதி ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று தலை மைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment