எழுச்சியுடன் தொடங்கியது கணியூர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 4, 2024

எழுச்சியுடன் தொடங்கியது கணியூர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

featured image

கணியூர், பிப். 4- தாராபுரம் கழக மாவட்டம் நடத்திய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 4.2.2024 அன்று கணியூர் ஓம்முருகா திருமண மண்ட பத்தில் மிக எழுச்சியுடன் காலை 10 மணிக்கு தொடங்கியது.


மாவட்ட கழக செயலாளர் வழக்குரைஞர் ஜெ.தம்பிபிரபாகரன் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார்.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தாராபுரம் மாவட்ட கழகத் தலை வர் க.கிருஷ்னன் தலைமையேற்று உரையாற்றினார்.
மாவட்டத் துணைத் தலைவர் ச.ஆறுமுகம், பொதுக்குழு உறுப் பினர் கி.மயில்சாமி, பொதுக்குழு உறுப்பினர் புள்ளியான், மாவட்ட துணைச் செயலாளர் நா. மாயவன், மாவட்ட ப.க தலைவர் தி.வெங் கடாசலம், மாவட்ட ப.க.செயலாளர் பு.முருகேசன், மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் ஜெயபிரகாஷ், மடத்துக் குளம் ஒன்றிய செயலாளர் ம.தங்க வேல், தாராபுரம் நகர தலைவர் சின்னப்பதாஸ், தாராபுரம் நகர செயலாளர் முத்தரசன், மாவட்ட தொழிலாளர் அணி பொறுப்பாளர் சிவக்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.வினோத்குமார், வழக் குரைஞர் தாராபுரம் சக்திவேல், கணி யூர் முருகேசன், மணி நாகராஜன், மாரிமுத்து, மாவட்ட இளைஞரணி தலைவர் கி.தென்றல், கணியூர் செல்வராசு, சதீஷ், இனியன் ஆகி யோர் முன்னிலையேற்று உரை யாற்றினர்.
பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு மாநில தலைவர் மா.அழகிரி சாமி தந்தை பெரியார் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் முதல் வகுப் பெடுத்தார்.
முனைவர் அதிரடி க.அன்பழகன், எழுத்தாளர் வி.சி.வில்வம், வழக்கு ரைஞர் சே.மெ.மதிவதனி, டாக்டர் இரா.கவுதமன், வழக்குரைஞர் பிரின்சு என்னாரெசு பெரியார், ஈட்டி கணேசன் ஆகியோர் தொடர்ந்து வகுப்பு எடுத்து வருகின்றனர்
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.

No comments:

Post a Comment