ஈரோடு மாவட்டத்தில் 80 ஆயிரத்து 567 எக்டேரில் தந்தை பெரியார் வன உயிரின சரணாலயம் தமிழ்நாடு அரசு ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 2, 2024

ஈரோடு மாவட்டத்தில் 80 ஆயிரத்து 567 எக்டேரில் தந்தை பெரியார் வன உயிரின சரணாலயம் தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை, பிப்.2 ஈரோடு மாவட் டத்தில் 80,567 எக்டேர் பரப்பில் ‘தந்தை பெரியார்வன உயிரின சரணாலயம்’ உதயமானது. அது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேர வையில் கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் “ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபி செட்டிபாளையம் வட்டங் களைச் சேர்ந்த 80,567 எக்டேர் வனப் பரப்பில் ‘தந்தை பெரியார் வன விலங்கு சரணாலயம்’ என்ற புதிய சரணாலயம் அமைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தலைமை வன உயிரினக் காப்பாளர் அரசுக்குஅனுப்பிய கருத்துரு பரிசீலிக்கப்பட்டு, கடந்த ஜன. 30ஆ-ம் தேதி அந்தியூர், கோபி வட்டங்களில் உள்ள காப்புக் காடுகளை ‘தந்தை பெரியார் வன உயிரின சரணாலயம்’ என அரசு அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட் டில் உள்ள வன உயிரின சரணா லயங்களின் எண் ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:
வட பர்கூர், தெற்கு பர்கூர், தாமரைக்கரை, எண்ணமங் கலம், நகலூர் காப்புக்காடுகளைச் சேர்ந்த 80,567.76 எக்டேர் பரப்பை வன உயிரின சரணா லயமாக அறிவிக்குமாறு வனத் துறை கருத்து அனுப்பியுள்ளது.

இந்த காப்புக்காடுகள், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கருநாடக மாநிலத்தில் உள்ள மலை மாதேஸ்வரா வன உயிரின சரணாலயம் மற்றும் காவிரி வன உயிரின சரணாலயம் ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளன. இவற்றை இணைக்கும்போது முக்கிய வழித்தடம் உருவாகி, புலிகளின் வாழ்விடப் பகுதியாக அமையும். ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் உள்ள காப்புக்காடு பகுதிகளில் பல்வேறு தாவ ரங்கள், வன விலங்குகள் நிறைந்துள்ளன.
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மற்றும் கருநாடக மாநிலத்தில் உள்ள காவிரி வனப் பகுதிகளுடன் இணைக் கும் முக்கியப் பகுதியான இந்த இடத்தைப் பாதுகாப்பது, சந்தன மரங்களின் மீள் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றும்.
இந்த காப்புக்காடு 70 வகையான வண்ணத்துப் பூச்சி இனங்கள், 35 வகை மீன் இனங்கள், 10 வகை நீர்நிலவாழ் இனங்கள், 25வகை ஊர்வன இனங்கள், நிலத்தில் வாழும் 5 வகை முதுகெலும்பில்லா விலங் குகள், 233 வகை பறவை இனங்கள், 48 வகை பாலூட்டி இனங்களை கொண்ட பல்லு யிர் பரவல் பகுதியாகும்.
முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், மனித-வன உயிரினமோதலைத் தணிக்கவும் இதை வன உயிரினச் சரணாலய மாக நிர்வகிக்க வேண்டியது அவசியமாகும்.
எனவே, மேற் கூறிய பகுதிகள் தந்தை பெரியார் வன உயிரினசரணாலயமாக அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment