காந்தியார் பற்றிய ஆளுநர் விமர்சனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 25, 2024

காந்தியார் பற்றிய ஆளுநர் விமர்சனம்

featured image

ஜனவரி 27 அன்று ஆளுநர் மாளிகை முற்றுகை : காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை, ஜன.25 “காந்தியாரின் விடுதலைப் போராட்ட பங்க ளிப்பை கொச்சைப்படுத்துகிற வகையில், அரசியல் காழ்ப் புணர்ச்சியோடு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ஆளுநர் ஆர். என்.ரவியை கண்டித்து காங் கிரஸ் கட்சியின் சார்பில் வருகிற சனிக்கிழமை (ஜன. 27) காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட் டம் எனது தலைமையில் நடைபெறும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய விடுதலை போராட்டத் துக்காக சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளின் அடிப் படையில் ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு போராட்டங்களை நடத்தி, இந்திய விடுதலையைப் பெற்றுத் தருவதற்கு தமது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் தேசத் தந்தை காந்தியார் .பல்வேறு மதம், மொழி, ஜாதி, இன வேறுபாடு களைக் கடந்து அனைத்து இந்தியர்களையும் ஒன்று திரட்டி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்திய தேசிய காங்கிரசை வழி நடத்தியவர் காந்தியார்.

அவரது விடுதலைப் போராட்ட பங்களிப்பை கொச்சைப்படுத்துகிற வகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து கூறியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.தமிழ்நாடு ஆளுநராக பொறுப் பேற்றது முதற்கொண்டு, தமிழ் நாடு நலன்களுக்கு விரோத மாகவும், தமிழ் மக்களின் பண் பாட்டை சிறுமைப்படுத்துகிற வகையிலும் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்தி யாவுக்கு விடுதலையை பெற்றுத் தந்தது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தான் என்றும், காந்தியார் அல்ல என்றும் கூறியிருப்பது அனைவரையும் கொதிப்படைய வைத்திருக் கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பங்கை பெருமையாக பேசுவ தற்கு பதிலாக அவரை காந்தியா ரோடு ஒப்பிட்டு பேசுவது வரலாற்றுத் திரிபுவாதமாகும். இந்திய விடுதலைப் போராட் டத்தில் காந்தியாரின் பங்க ளிப்பை அங்கீகரித்து அவரது வாழ்த்துகளை பெற்றவர் சுபாஷ் சந்திரபோஸ். விடு தலைப் போராட்டத்தில் அகிம்சை முறையை கையாண் டவர் காந்தியார். அதற்கு மாறாக, ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தியவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர் களது பங்களிப்பை அனைத்து இந்தியர்களும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு போற்றி பாராட்டி வருகிறார்கள்.

இவ்விருவரிடையே பேதம் கற்பிக்கிற வகையில் கருத்துகளை ஆர்.என். ரவி கூறியிருப்பது வரலாற்றை சரியாக அறிந்தும் அதை திரித்து பேசுவது மலி வான அரசியலாகும். இதை அவர் அரசியல் உள்நோக்கத் தோடு செய்து வருகிறார்.

காந்தியாரை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தியாகி என்று போற்றுகிற பாரம்பரியத்தில் வந்த ஆர்.என். ரவி போன்றவர்கள் இத்தகைய கருத்துகள் கூறுவதை எவரும் அனுமதிக்க முடியாது.ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியாக உலகம் போற்றி மகிழும் காந்தியாரின் பெரு மைகளை சிறுமைப்படுத்த முயலும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் வருகிற ஜன. 27 சனிக்கிழமை காலை 11 மணி யளவில் சென்னை சைதாப் பேட்டை சின்னமலை ராஜீவ் காந்தி சிலையிலிருந்து ஊர்வல மாக புறப்பட்டு, ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட் டம் எனது தலைமையில் நடைபெறும். இதில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகிப் பார்கள். அதேபோல, தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி களும் தங்களது மாவட்டத்துக் குட்பட்ட ஏதாவது ஒரிடத்தில் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவின் அடையாள மாக உலக நாடுகள் மத்தியில் போற்றத்தக்க வகையில் அனைத்து மக்களாலும் நேசிக் கப்படுபவர் தேசத் தந்தை காந்தி யார். அவரை கொச் சைப்படுத்து வது 140 கோடி இந்தியர்களையும் அவமானப் படுத்துவதாகும். அதை அனுமதிக்க முடியாத வகையில், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட் டம் தமிழ்நாடு முழு வதும் வெற்றிகரமாக நடைபெற மாவட்ட காங்கிரஸ் கமிட் டிகள் தீவிர முனைப்புடன் சிறப்பான ஏற்பாடுகளை செய் யும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment