ஜப்பானைப் பாடாய்ப் படுத்தும் இயற்கைச் சீற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 7, 2024

ஜப்பானைப் பாடாய்ப் படுத்தும் இயற்கைச் சீற்றம்

featured image

டோக்கியோ, ஜன.7- நில அதிர்வு மற்றும் நூற்றுக்கணக்கான பின்னதிர்வுகள், சுனாமி எச்சரிக்கை, பேரலைகள் முதலானவை ஜப்பான் மக்களை அறியா பீதிகளுக்கு இட்டுச் சென்றது. மக்கள் மட்டுமல்ல, நிலநடுக்க ஆய்வா ளர்கள், நில அதிர்வு ஆய்வு விஞ்ஞானிகளையும் இது குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பான் உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுக ளில் ஒன்றாகும், ஏனெனில், ஜப்பான் நாடு நான்கு ஒன்றிணைந்த டெக்டானிக் பெருந்தாங்கு பாறைகளின் மேல் அமர்ந்திருக்கிறது. இவை ஒன்றுடன் ஒன்று தொடர்ந்து பெரிய அளவில் உராய்வுகளைக் கொண்டிருக்கும். ஒவ் வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக் கங்கள் ஜப்பான் நாட்டைத் தாக்கு கின்றன.
இருப்பினும், பெரும்பாலானவை உணர முடியாத அளவுக்கு மிதமான வைகளே. ஜப்பானில் உள்ள கனாசாவா பல்கலைக்கழகத்தின் நில அதிர்வு நிபுணர் யோஷிஹிரோ ஹிராமட்சு, ‘ஜப்பானில் பெரும்பாலான பெரிய நில அதிர்வுகள் கிழக்கு கடற்கரையில் உள்ள பசிபிக் டெக்டானிக் பெரும் பாறை காரணமாக ஏற்படுகின்றன. இது வட அமெரிக்க டெக்டானிக் பெருந்தாங்கு பாறையின் அடியில் சரிவதால் பெரிய நில அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

2011-இல் தோஹோகு பகுதியைத் தாக்கிய 9.1 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து பேரலை சுனாமியைத் தூண்டியது. இந்த நில அதிர்வு ஜப்பானில் இதுவரை பதிவு செய்யப்படாத பெரும் நிலநடுக்க மாக ஆனதற்கான காரணியாக பசிபிக் பிளேட் வட அமெரிக்க பிளேட்டுக்கு அடியில் சரிந்ததைக் குறிப்பிடலாம்’ என்கிறார்.
புத்தாண்டு முதல் நாளன்று 7.6 ரிக்டர் நில அதிர்வு தாக்கிய இஷிகாவா தீவிலும் நிலநடுக்கங்கள் புதிதல்ல. 2020ஆ-ம் ஆண்டு முதல் 500 நிலநடுக் கங்கள் ஏற்பட்ட பகுதிதான் இது.
மெல்போர்னில் உள்ள நிலநடுக்க ஆய்வு மய்யத்தைச் சேர்ந்த நிலவியல் ஆய்வாளர் ஆடம் பாஸ்கல் கூறும் போது, ‘நாட்டின் கிழக்குப் பகுதியில் ஏற்படும் நில அதிர்வுகளை விட இத்தகைய நில அதிர்வுகள் வித்தியாச மானவை.

இப்பகுதியில் டெக்டானிக் பிளேட் டின் எல்லையில் பூகம்பம் ஏற்படுவ தில்லை. மாறாக, டெக்டானிக் பிளேட்டுகளின் உள்ளேயே பாறைத் தளங்களில் உள்ள இடைமுறிவு (fault lines) அல்லது பெரும்பிளவு காரணமாக ஏற்படுகிறது.

அதாவது, டெக்டானிக் பிளேட்டு கள் ஒன்றுக்கொன்று எதிராகத் தள்ளப் படும்போது இந்த பாறைத்தள இடை முறிவு அழுத்தத்தின் கீழ் வைக்கப் படுகின்றன. அழுத்தம் அதிகமாக அதிகமாக பிளவுக்கு மேல் இருக்கும் பாறைப்பகுதி கீழ்நோக்கி சரியும் இது நார்மல் என்று அழைக்கப்படுகிறது. மாறாக, இடைமுறிவுக்குக் கீழ் இருக்கும் பகுதி நகர்ந்தால் அது ரிவர்ஸ் ஃபால்ட் என்று அழைக்கப்படுகிறது.

இஷிகாவாவில் அன்று ஏற்பட்டது இந்த இரண்டாம் வகை இடப் பெயர்வு தான். அதனால்தான் விளைவுகள் படுமோசமாகப் போனது’ என்றார்.
பாறைத்தளங்களில் இடைமுறிவு எனப்படும் யீணீuறீt-கள் நில அதிர்வு தாக்கிய நோட்டோ பெனின்சுலாவுக்குக் கீழ் 150 கிமீ தூரம் வரை உள்ளதாகும் என்கிறார் கியோட்டோ பல்கலைக் கழக நிலநடுக்க ஆய்வாளர் அய்டரோ கேட்டோ. இவர் மேலும் கூறும்போது, ‘இந்த ஃபால்ட் லைன் மிகவும் அகல மானது இந்த ராட்சத இடைமுறிவு ரிவர்ஸ் ஃபால்ட் எனப்படும் வகை யாகும்.
இது ஒரு பாறையின் மேல் மற்றொரு பாறையின் நகர்வைக் குறிக்கிறது, இஷிகாவாவில் இடைமுறிவுக்கு அடி யில் உள்ள பெரும்பகுதி சரிந்துள்ளது.
ஆகவே பிளேட்டுக்குள் இருக்கும் பாறைத்தள இடைமுறிவுகள் அதிக மாக இருந்திருக்கலாம். இது நில அதிர் வைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பின்னதிர்வுகளை உருவாக்கியிருக்கலாம்’ என்று கூறியுள்ளார்.

பூமியின் மேற்புறத்தோட்டினுள்ளே ஆழமான பகுதிகளில் உள்ள திரவங் களும் பாறைநகர்வுகளுக்குக் காரண மாகி இஷிகாவாவில் நில அதிர்வுகளை உருவாக்கியிருக்கலாம் என்று மற் றொரு ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த திரவங்கள் பூமியின் மேல் தோட்டு வழியாக மேலே பொங்கி வரும்போது, அவை பாறைத்தளங்களில் உள்ள இடைமுறிவுகளை பலவீனமாக்கி அதை சரிவடையச் செய்திருக்கலாம் என்கின்றன ஆய்வுகள்.

ஜப்பான் ‘பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்’ என்று அழைக்கப்படும் நில அதிர்வு நடவடிக்கைகள் அதிகம் உள்ள பகுதி யில் அமைந்துள்ளது, இது உலகின் மிகவும் தீவிரமான நில அதிர்வு டெக் டோனிக் இயக்கப் பகுதி ஆகும். லைவ் சயின்ஸின் அறிக்கையின்படி, இங்கு “உலகின் பல நில அதிர்வுகள் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படும்.
இந்த ரிங் ஆஃப் பயர் எனப்படும் பகுதியில் பூமியைத் தாங்கும் பசிபிக் பெரும்பாறை, யூரேசியன் பிளேட், இந்தோ-ஆஸ்திரேலியன் பிளேட் ஆகியவை உள்ளன. இவை ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதும், ஒன்றின் அடியில் ஒன்று சரிவதும் ஒன்றுடன் ஒன்று உராய்வதும் தினசரி நிகழ்வாக நடைபெறுகிறது.
இதனால் நில அதிர்வுகளும், எரி மலை வெடிப்புகளும் சுனாமிகளும் ஏற்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment