‘மசூதிகளை இடித்துத் தள்ளுங்கள்: இல்லையென்றால் கொல்லப்படுவீர்கள்!’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 10, 2024

‘மசூதிகளை இடித்துத் தள்ளுங்கள்: இல்லையென்றால் கொல்லப்படுவீர்கள்!’

பா.ஜ.க. மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா அராஜக மிரட்டல்

பெலகாவி, ஜன.10- மக்களவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் நாட்டில் இந்து – முஸ்லிம் வன்முறையை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் முனைப் பில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப் புகள் தீவிரமாகி வெறுப்பு பிரச் சாரத்தை கையிலெடுத்துள்ளன.
இந்நிலையில், மதவெறி வெறுப் புப் பேச்சுகளுக்குப் பெயர் பெற்ற கருநாடக மேனாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா கடந்த 7_1_2024 அன்று பெல்காவியில் (கருநாடக மாநிலம்) நடைபெற்ற இந்துத்துவா சார்பு கூட்டத்தில், “இந்து கோவில் களை இடித்துத் தான் மசூதிகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் முஸ்லிம்கள் தாங்களாகவே மசூதி களை இடித்து தள்ளுங்கள். அது தான் உங்களுக்கு நல்லது. இல்லை யென்றால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

எத்தனை பேர் கொல்லப்படுவார்கள், என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்பது எங்களுக்கே தெரியாது” என இந்து – முஸ்லிம் மக்களிடையே வன்முறை தூண்டும் முனைப்பில் வெறுப்பை கக்கியுள்ளார்.
கே.எஸ்.ஈஸ்வரப்பா இவ்வாறு பேசுவது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்,”நாட்டில் கோவில் இருந்த இடங்களில் கட் டப்பட்டுள்ள ஒரு மசூதியை கூட தரைமட்டமாக்காமல் விடமாட் டோம்” என மிரட்டல் விடுத்தார்.
தொடர்ந்து மதக்கலவரத்தை தூண்டும் வகையில் வெறுப்பு மிக்க பேச்சை பேசி வருவதால் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என சமூகவலைத் தளங்களில் கோரிக்கை வலுத்து வருகின்றன.

No comments:

Post a Comment