கேரளாவில் இடுக்கி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 30, 2024

கேரளாவில் இடுக்கி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை!

featured image

தாயின் இறுதி நிகழ்ச்சிக்குக் கூட வராத
மகன், மகள் அரசுப் பணியில் இருந்து நீக்கம்
கேரளாவில் இடுக்கி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை!

குமுளி, ஜன.30– குமுளியில் தாய்க்கு இறுதி நிகழ்வுகளை நிறைவேற்றாத மகன், மகளை அரசுப் பணியிலிருந்து நீக்கம் செய்து மாவட்ட ஆட் சியர் அதிரடி நடவடிக்கை எடுத் துள்ளார்.
தேனி மாவட்ட எல்லை அருகே கேரள மாநிலத்தைச் சேர்ந்த குமுளி அமைந்துள்ளது. இங்கிருந்து 3 கிமீ. தொலைவில் அட்டப்பள்ளம் அருகே லட்ச மேடு பகுதியில் வசித்து வந்தவர் அன்னக்குட்டி மேத்யூ(72).
கணவர் இறந்த நிலையில் இவர் தனியே வசித்து வந்தார். இவரது மகன் சஜூமோன்(55), கேரளா கூட்டுறவு வங்கியில் வசூல் முகவராகவும், மகள் சிஜூ(52) ஊராட்சி அலுவல கத்தில் கணினி இயக்குநராகவும் பணிபுரிந்தனர். திருமணமாகி தனித்தனியே அவரவர் குடும் பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அன்னக் குட்டியின் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்ட இருவரும் தங்களது தாயை கவனிக்கவில்லை. இதனால் கல் லீரல் பாதிக்கப்பட்டு மயங்கியே கிடந்தார் அன்னக்குட்டி.
தகவல் கொடுத்தும் இருவ ரும் வராததால் அருகில் உள்ள வர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். குமுளி ஆய்வாளர் ஜோபின் ஆண்டனி, உதவி ஆய்வாளர் மணி ஆகி யோர் அன்னக்குட்டியை கடந்த வாரம் குமுளி அரசு மருத்துவ மனையிலும், பின்பு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலும் சேர்த்தனர்.
இருப்பினும் கடந்த 24-ஆம் தேதி அவர் உயிரிழந்தார். தாய் இறந்த தகவலை பலமுறை தெரிவித்தும் இருவரும் இறுதி நிகழ்வுக்குக் கூட வரவில்லை.
இதுகுறித்த தகவல் கிடைத் ததும் இடுக்கி மாவட்ட ஆட் சியர் ஷீபா ஜார்ஜ் குமுளிக்கு வந்து மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பின்பு அட்டப்பள்ளத்தில் உள்ள அன்னக்குட்டியின் உடல் செயின்ட் தாமஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இறுதி நிகழ்வுக ளில் பங்கேற்றனர். தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையிலும், இறந்தபோதும் கூட பிள்ளைகள் வராதது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து இரு வருக்கும் காவல் துறையினர் தாக்கீது வழங்கினர்.

இந்நிலையில் இடுக்கி ஆட் சியர் ஷீபா ஜார்ஜ் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார்.
இதனைத் தொடர்ந்து சில நாள்களுக்கு முன்பு இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment