தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமைந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு! தமிழ்நாடு முதலமைச்சருக்கு வைகோ பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 10, 2024

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமைந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு! தமிழ்நாடு முதலமைச்சருக்கு வைகோ பாராட்டு

சென்னை,ஜன.10- ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மாநிலங் களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
2024ஆம் ஆண்டின் தொடக் கத்தில் ஜனவரி 7, 8 ஆகிய நாட் களில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச் சியில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தி உள்ளது.

சென்னை வர்த்தக மய்யத்தில் நடைபெற்ற இம்மாநாட்டின் நிறைவு விழாவில் சிறப்புரை ஆற்றிய தமிழ்நாடு முதல மைச்சர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் “உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன் எப்போதும் இல்லாத அளவாக 6 இலட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் என்பதை இந்தியாவே உற்று நோக்கும் இந்த அவையில் பெரு மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன் என்றும், இந்த முதலீடுகள் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக மொத்தம் 26 இலட்சத்து 90 ஆயிரத்து 657 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்றும் குறிப் பிட்டது நம் அனைவருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சியை ஏற் படுத்துகிறது.
சிங்கப்பூர், ஜப்பான், அய்க் கிய அரபு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட சுற் றுப் பயணத்தின் விளைவாக ஏற்பட் டுள்ள பெரும் சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சம் கோடி டாலர் பொரு ளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட முத லமைச்சர் அவர்கள் இலக்கு நிர் ணயித்துள்ளதையும் இந்த நேரத்தில் எண்ணி தமிழ்நாடு பெருமை கொள்கிறது.

உலக நாடுகளை உள்ளடக் கிய இந்த மாநாட்டில் அமெ ரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, பிரான்சு, ஆஸ்திரேலியா, ஜெர் மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் தமிழ்நாட்டு அரசுடன் பங்கு தாரர் நாடுகளாக இணைந் துள்ளன.
மேற்கு ஆஸ்திரேலியா மற் றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங் களும் மாநாட்டில் இணைந்து செயல்பட்டு இருக்கின்றன.

தலைமைத்துவம் (Leadership), நீடித்த நிலைத்தன்மை (Sustain ability), அனைவரையும் உள்ள டக்கிய வளர்ச்சி (Inclusivity) ஆகிய கருப்பொருள்களில் இந்த மாநாடு நடத்தப்பட்டு இருக்கிறது.

8 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்ட இந்த மாநாட் டில், 300 முதலீட்டாளர்கள், 50க்கும் மேற்பட்ட அமர்வுகளில் விவாதித்து, தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சிக் காக சிறந்த முடிவுகளை எடுத் துள்ளார்கள்.

“தெற்காசியாவின் முதன்மை மாநிலமாக உயர்ந்து வரும் தமிழ்நாடுதான் உலக முதலீட் டாளர்களின் முதல் முகவரி என்பதே நமது நிலையான செய்தியாக இருந்து வருகிறது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ள செய்தி நம் அனைவரையும் பெருமிதம் பொங்கச் செய்கிறது.
திராவிட மாடல் அரசினை திறம்பட வழிநடத்தி வரும் தமிழ் நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் இச் சாதனை தமிழ்நாட்டு வரலாற் றில் வைர எழுத்துகளில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தொழில் வளர்ச்சியின் மூலம் பொருளாதார நிறைவு காண வும், இலட்சக்கணக்கான தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தரவும், நாட்டை வலுவான பாதைக்கு அழைத்துச் செல்லவும் அரும் பணி ஆற்றிவரும் தமிழ் நாடு முதலமைச்சருக்கு என் அன்பான பாராட்டுகள், வாழ்த் துகள்.

-இவ்வாறு வைகோ அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment