குறைந்துவரும் கரோனா தொற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 11, 2024

குறைந்துவரும் கரோனா தொற்று

புதுடில்லி, ஜன. 11 ஜே.என்.1 வகை உருமாறிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்தது. கடந்த மாதம் டிசம்பர் 5ஆ-ம் தேதி வரை இரண்டு இலக்கங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை இருந்தது. ஆனால் குளிர் காலம் ஆரம்பித்த பின்னர் பாதிப்பு அதிகமாக தொடங்கியது. கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அன்று ஒரே நாளில் அதிக பட்ச மாக 841 பேர் பாதிக்கப்பட்டனர். இது கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவான அளவில் 0.2 சதவீதம் ஆகும். இந்த நிலையில் இன்று இந்தியா வில் புதியதாக 605 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 பேர் கர்நாடகா மேலும் 2 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 3,643 ஆகும். இது முந்தைய நாளை விட குறைவு ஆகும். தற்போது பாதிக்கப்பட்டவர்களில் 92 சத வீதம் பேர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்ட சூழ்நிலையில் குண மடைந்து வருகின்றனர்.

 

No comments:

Post a Comment