உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளைப் புதுப்பிக்கும் ‘வேர்களைத் தேடி’ திட்டம் துவக்கம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 2, 2024

உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளைப் புதுப்பிக்கும் ‘வேர்களைத் தேடி’ திட்டம் துவக்கம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை, ஜன.2- உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப் பிக்கும் “வேர்களைத் தேடி” திட் டம் துவக்கப்படும் என்று தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வரு மாறு:

அயலகத்தில் வாழும் தமிழர்க ளின் நலன் காக்கவும், அயலகத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து கல்வி, வேலைவாய்ப்புகள் என்று இடம் பெயரும் தமிழர்களை பாதுகாப் பாக வழிநடத்தவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களின் வழிகாட்டுதலுடன் “அயல கத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ் வுத்துறை” செயல்பட்டு வருகிறது.
அயலகத் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்கும் முகமாக தமிழ்நாடு அரசு “அயலகத் தமிழர் நாள்” எனும் சிறப்பு நாளை அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறது.

அயலகத் தமிழர்களின் கலாச் சார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு நகர்வாக பல தலைமுறைக ளுக்கு முன்பு அயலகம் இடம் பெயர்ந்து அங்கு வாழும் அயலகத் தமிழர்களின் குழந்தைகளுக்காக “வேர்களைத் தேடி” என்றொரு பண்பாட்டுப்பயணத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் அறிவித்திருந்தார்.
இத்திட்டம் மூலம் அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழர்களின் இளைஞர்களை தமிழ் நாடு அரசு செலவில் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து தமிழ் மற்றும் தமிழர் தம் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வர லாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தார் தமிழ் நாடு முதலமைச்சர் இதனடிப்படை யில் “வேர்களைத் தேடி” திட்டத் தின் முதல் பயணம் டிசம்பர் 27ஆம் தேதி காலை 8 மணி அள வில் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ் நாடு ஹோட்டலில் இருந்து பயணம் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு அயலகத் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி. கே.எஸ்.மஸ்தான் இப்பண்பாட்டு பயணத்தை துவக்கி வைக்கிறார். தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் கிருஷ்ண மூர்த்தி அய்.ஓ.எப்.எஸ். முன்னிலை வகிக்கிறார். இப்பண்பாட்டு பயணத்திற்காக ஆஸ்திரேலியா, கனடா, பிஜி இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 58 இளைஞர்கள் தேர்வாகி தமிழ் நாடு அரசு செலவில் சென்னை வந்தடைந்துள்ளனர்.

மேலும் சென்னையில் இருந்து மாமல்லபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திரு நெல்வேலி, மதுரை, திருச்சி, செஞ்சி கோட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு பயணித்து தமிழர் களின் கட்டடக்கலை, சிற்பக் கலை, இயல், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், சுதந்திரபோராட்ட வரலாறு, பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்து கொள்வார்கள்.

இத்துடன் தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் கலந் துரையாடல்களும் பயிற்சி வகுப்பு களும் இடம்பெறுகின்றன.
இந்த இருவார பயணத்தின் மூலம் தமிழர்களின் கலாச்சாரம், வரலாறு, மொழியியல் உட்பட பல்வேறு திறன்களை கற்றுணர் வார்கள் மூன்றாவது ஆண்டாக அயலகத் தமிழர்கள் நாள் வரும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இவ்விழாவில் இந்த இளைஞர்கள் பங்கேற்று தங்களின் அனுபவங் களை பகிர்ந்துகொள்வார்கள்.

மேலும் தங்கள் நாடுகளுக்கு சென்று தமிழர்களின் கலாச்சார தூதுவர்களாகவும் செயல்பட ஊக்கம்பெறுவார்கள்.
தொடர்புக்கு: செண்பகவள்ளி : 6382067900, சத்தியா: 9600153394, ராஜ்மோகன்: 9551546616.

-இவ்வாறு அதில் குறிப்பிட் டுள்ளது.

No comments:

Post a Comment