மூடநம்பிக்கையின் விபரீதம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 26, 2024

மூடநம்பிக்கையின் விபரீதம்!

கங்கையில் மூழ்கினால்
புற்றுநோய் தீருமா? சிறுவன் மரணம்

டேராடூன்,ஜன.26- டில்லியை சேர்ந்த இணையர் தனது 5 வயது மகனுடன் வசித்து வந்துள்ளனர். அந்த சிறுவன் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள் ளான். இதனால் சிறுவனின் பெற்றோர் டில்லியில் உள்ள நவீன புற்றுநோய் மருத்துவ மனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் சிறுவ னின் ரத்த புற்றுநோயின் தாக்கம் அதிகமானதால் காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் தெய்வ வழிபாட் டில் அதிக நம்பிக்கை கொண்ட அந்த சிறுவனின் பெற்றோர், புனித கங்கையில் நீராடினால் ரத்தப் புற்றுநோய் சரியாகிவிடும் என நினைத்தனர்.

இந்நிலையில், டில்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத் தில் உள்ள ஹரித்துவாருக்கு புனித நீராட குடும்பத்துடன் சென்றுள்ளனர். இவர்களுடன் சிறுவனின் அத்தையும் சென்றுள் ளார். இவர்கள் அனைவரும் கங்கை நதியில் இறங்கியுள்ளனர். அந்த சிறுவனை அவனது அத்தை நீரில் மூழ்கடித்துள்ளார். அவனை நீரில் மூழ்கடித்தபோது, அவனது பெற்றோர் பிரார்த் தனை செய்துள்ளனர். இதனை அருகில் உள்ளவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தது அந்த சிறுவனை தண்ணீரில் இருந்து வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது அந்த சிறுவனின் அத்தை, அவர்களுடன் சண்டையிட்டுள்ளார். ஆனாலும் அங்கு உள்ளவர்கள் அந்த சிறுவனை நீரில் இருந்து வெளியில் தூக்கி யுள்ளனர். கரைக்கு கொண்டு வந்தபோது அந்த சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து இறந்த சிறுவனின் உடலை வைத்து அவனின் அத்தை பிரார்த்தனை செய்தது அங்கு உள்ளவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் இந்த நிகழ்வு பற்றி அங்கு உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம் பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனின் பெற்றோர் மற்றும் அத்தையை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment