மக்களவைத் தேர்தல் : தி.மு.க. - காங்கிரஸ் முதல் கட்ட பேச்சு வார்த்தை சுமூக முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 29, 2024

மக்களவைத் தேர்தல் : தி.மு.க. - காங்கிரஸ் முதல் கட்ட பேச்சு வார்த்தை சுமூக முடிவு

featured image

சென்னை,ஜன.29- மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர் பாக திமுக – காங்கிரஸ் இடையே முதல்கட்ட பேச்சு வார்த்தை நேற்று நடந்தது. இதில் முடிவு எட்டப் படாததால் பிப்.9-ஆம் தேதிக்கு பிறகு 2-ஆம் கட்ட பேச்சு வார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் நியமித்துள்ள கூட்டணி பேச்சு வார்த்தை குழு அமைப் பாளர் முகுல் வாஸ்னிக், மேனாள் ஒன்றிய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழ்நாடு பொறுப்பாளர் அஜோய் குமார் ஆகியோர் சென்னை யில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலக மான சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று (28.1.2024) வந்தனர்.

அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மாநில தேர்தல் குழுவினருடன் தனித்தனியே பேசி, கருத்துகளை கேட்டறிந் தனர். அப்போது, காங்கிரஸ் குறைந்தபட்சம் 3 தனி தொகு திகளில் போட்டியிட வேண் டும். திமுகவிடம் அதிக தொகு திகள் கேட்க வேண்டும் என்று பல நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பின்னர், காங்கிரஸின் தேசிய கூட்டணி பேச்சு வார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், மேனாள் ஒன்றிய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழ்நாடு பொறுப் பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்றனர்.

திமுக தொகுதி பங்கீட்டு குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமை யில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அய்.பெரியசாமி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், துணை பொதுச் செயலாளர் பொன்முடி, மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோருடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, காங்கிரஸ் 15 தொகுதிகள் கேட்டதாகவும், புதுச்சேரி உட்பட7 தொகு திகள் மட்டுமே வழங்கப்படும் என்று திமுக தரப்பில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், எந்த முடிவும் எட் டப்படவில்லை. இதையடுத்து, இரு தரப்பினரும், தங்கள் தலைவர்களுடன் கலந்து பேசி, அதன் விவரங்களை அடுத்த கூட்டத்தில் தெரிவிப்பது என்று முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் காங் கிரஸ் தலைவர்கள் கூறிய தாவது:
கே.எஸ்.அழகிரி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் திமுக நிர்வாகிகளுடன் தேர் தல் தொடர்பாக கலந்துரை யாடினர். முகுல்வாஸ்னிக் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமாக இருந் தது. மேற்கொண்டு பேச வேண் டிய விஷயங்களை வெகு விரைவில் பேசுவோம்.

முகுல் வாஸ்னிக்: மக்க ளவை தேர்தல் தொடர்பாக விவாதிப்பதற்கான முதல் கூட் டம் நடந் துள்ளது. புதுச்சேரி குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டம் சுமுகமாக நடந்தது. இதில் மக்களாட்சிக்கு ஆபத் தான வற்றை எதிர்கொள்வது பற்றியும் ஆலோசித்தோம். தொகுதிப் பங்கீடு செய்வது தொடர்பாக அடுத்த கூட்டத் தில் பேச இருக்கிறோம். “இண்டியா” கூட்டணியில் நடந்துவரும் நிகழ்வுகளை நாங்கள் எளிதில் கடந்து செல் கிறோம். இறுதியில், “இண் டியா” கூட்டணி வலுவாக உருவெடுக் கும். சில கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளி யேறினாலும், கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் இருக்கின் றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
திமுக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியதாவது: திமுக – காங்கிரஸ் இடையே ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை தான் நடந்துள்ளது. மக்களவை கூட்டத்தொடர் வரும் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பிறகு, காங்கிரஸ் நிர்வாகி களுடன் 2-ஆம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெறும். திமுக கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணைய லாம். ஆனால் எங்களிடம் இடம்தான் இல்லை.

நிதிஷ்குமார் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினையில் இருந் திருக்கிறார். கூட்டணிக்காக சகித்துக்கொண்டு இருந்தோம். இண்டியா கூட்டணியில் இருந்து அவர் வெளியேறிய தால் எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment