இயக்கத்தில் புதிதாக இணைந்த இளைஞர்களுக்குப் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 28, 2024

இயக்கத்தில் புதிதாக இணைந்த இளைஞர்களுக்குப் பாராட்டு

featured image

நாகர்கோயில், ஜன. 28- குமரி மாவட்ட திராவிடர்கழக இளைஞரணி மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

“தந்தை பெரியாரின் இறுதி முழக்கமும், தமி ழர் தலைவர் கி.வீரமணி அளித்த உறுதி முழக்கமும் செயலாக்கம்“ என்ற நோக்கில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பங் கேற்று தொடக்க வுரை யாற்றினார். மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ், மாண வர் கழகத் தலைவர் இரா. கோகுல். பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் செந்தூர் பாண்டியன் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெரு மாள், கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், கழக இலக்கிய அணி செயலா ளர் பா.பொன்னுராசன், நாகர்கோவில் மாநகர கழக தலைவர் ச.ச.கருணா நிதி, துணைத் தலைவர் கவிஞர் ஹ.செய்க்முகமது, கழக கோட்டாறு பகுதி தலைவர் ச.ச. மணி மேகலை, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலா ளர் பெரியார் தாஸ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் எஸ்.குமார தாஸ், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பா ளர் க.யுவான்ஸ் மற்றும் பலர் பங்கேற்றனர். புதிய தோழர்கள் கோம்ப விளை செ.ரீகன், ஆற்றூர் இரா.இராஜேஸ் மற்றும் பலரும் கழகத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

மறைவுற்ற திராவிடர் கழக செயலவைத் தலைவர் பெரியார் பெருந் தொண்டர் சு.அறிவுக் கரசு அவர்களது படம் திறக்கப்பட்டு அவரது மறைவுக்கு இரங்கல் தீர் மானம் நிறைவேற்றப்பட் டது.

பிப்ரவரி 1 அன்று காலையில் சென்னையில் நடக்கும் மாணவர் கூட் டமைப்பு நிகழ்சியிலும், மாலையில் பெரியார் திடலில் தமிழர் தலைவர் கி.வீரமணி பங்கேற்கும் மாணவர் கருத்தரங்கிலும் குமரிமாவட்ட திராவிட மாணவர் கழகம், இளை ஞரணி சார்பாக ஏராள மானோர் பங்கேற்பது எனவும்,
பிப்ரவரி 24 அன்று கன்னியாகுமரியில் பெரி யாரியல் பயிற்சி முகாம், மாலையில் இரணியலில் பொதுக்கூட்டம் நடத்து வது எனவும் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

குமரிமாவட்ட திரா விட மாணவர் கழகத் திற்கு மாவட்ட தலைவ ராக இரா.கோகுல், செய லாளராக செ.ரீகன், இளைஞரணி மாவட்ட தலைவராக இரா.இரா ஜேஷ், செயலாளராக எஸ். அலெக்சாண்டர், அமைப்பாளராக ம.தமிழ் மதி நாகர்கோ வில் மாநகர அமைப்பாள ராக சந்தோஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment