ராமன் நெற்றியில் மட்டுமா நாமம், விவசாயிகளுக்கும்தான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 26, 2024

ராமன் நெற்றியில் மட்டுமா நாமம், விவசாயிகளுக்கும்தான்!

மைசூர், ஜன.26 அயோத்தியில் பாபர் மசூதி யை இடித்து, அங்கு கட்டப்பட்டுள்ள ராமன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள குழந்தை ராமன் சிலைக்கான கல் வழங்கியவர் கருநாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராம்தாஸ் ஆவார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த விவசாயியான ராம்தாஸ் தனது 2.14 ஏக்கர் மொத்த நிலத்தை யும் கருநாடகாவில் ராமன் கோவில் எழுப்ப கொடையாக அளிப்பதாக அறிவித்தார். இந்நிலையில், ராமன் சிலைக்கு கல் கொடை அளித்த ராம்தாஸ் மற்றும் கற்களை பாறையில் இருந்து கடும் சிரமத்துடன் உடைத்துக் கொடுத்த குவாரி குத்தகைதாரர் சிறீனிவாஸ் நடராஜ் ஆகியோர் அயோத்தி ராமன் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்கப்படவில்லையாம்.

No comments:

Post a Comment