பொங்கல் விழாவை ஒட்டி 19 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு சிறப்பான ஏற்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 12, 2024

பொங்கல் விழாவை ஒட்டி 19 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு சிறப்பான ஏற்பாடு

featured image

சென்னை,ஜன.12- தமிழர் திருநாளான பொங்கல் விழாவுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்றன. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து பணி நிமித்தமாக சென் னையில் தங்கி இருப்பவர்களும், கல்வி பயில வந்திருக்கும் மாணவர் களும் பொங்கல் விழாவுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல முன்கூட்டியே ஆயத்தமாகினர். இதையடுத்து, கடந்த 8-ஆம் தேதி போக்கு வரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பொங்கல் விழா சிறப்புப் பேருந்துகளுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, சென்னையில் இருந்து இன்று (12.1.2024) முதல் தினசரி இயக்கப்படும் 2,100 அரசு விரைவு பேருந்துகளுடன் 4,706 சிறப்புப் பேருந்துகளும் சேர்த்து 3 நாட் களுக்கு மொத்தம் 11,006 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இதே போல், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்தும் பிற இடங்களுக்கு 8,478 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆக மொத்தம், 19,484 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

6 இடங்களில்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் சானிடோரியத்தில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (மெப்ஸ்), வள்ளுவர் குருகுலம் மேல் நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங் குன்றம் வழியாக ஆந்திரா மாநிலத்துக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. புதுச்சேரி, கட லூர், சிதம்பரம் செல்லும் பேருந் துகள் கலைஞர் கருணாநிதி நகரில் இருந்து இயக்கப்பட உள்ளது.

இதேபோல், திண்டிவனம், விக்கிர வாண்டி, பண்ருட்டி வழியாக கும்ப கோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து சிறப்பு பேருந்துகளும் (அரசு விரைவு பேருந்துகள் நீங்கலாக) தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து ஒரகடம் வழியாக காஞ்சிபுரம், வேலூர், ஆரணி செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோ ரியம் வள்ளுவர் குருகுலம் மேல் நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படுகிறது. மேலும், பூந்தமல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ் ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகள், பூந்தமல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்பட இருக்கிறது.
இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகின்றன. அதா வது, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங் கோட்டை, தூத்துக்குடி, திருச்செந் தூர், நாகர்கோவில், திண்டிவனம், திருவண்ணாமலை, வந்தவாசி, செஞ்சி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டு மன்னார்கோவில், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, திருக் கோவிலூர், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, செயங்கொண் டம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமநாதபுரம், சேலம், கோவை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும், பெங்களூரு மற்றும் கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர்.) மார்க்கமாக மயிலாடு துறை, நாகப் பட்டினம், திருத்துறைப் பூண்டி, வேளாங்கண்ணி ஆகிய ஊர் களுக்கு செல்லும் பஸ்களும் கோயம் பேட்டில் இருந்து புறப்படும்.

அரசு விரைவு பேருந்துகளில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர், மதுரை, திருநெல்வேலி, செங் கோட்டை, தூத்துக்குடி, திருச் செந்தூர், நாகர்கோவில், மார்த் தாண்டம், திருவனந்தபுரம், காரைக் குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ் வரம், சேலம், கோவை, எர்ணாகுளம் ஆகிய ஊர்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டும் கிளாம் பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந் துகள் இயக்கப்பட இருக்கின்றன.
இதனால், அரசு பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத் தூரில் இருந்து ஏற முன்பதிவு செய்த பயணிகளும் கிளாம்பாக்கத்துக்கு வந்துவிட அறிவுறுத்தப்பட்டுள்ள னர். மேலும், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் உள்பட சிறப்புப் பேருந்துகள் புறப்படும் 6 பேருந்து நிலையத்துக்கும் இன்று முதல் 450 சிறப்பு இணைப்பு பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படுகின்றன.

இதேபோல், பொங்கல் விழாவை கொண்டாடிவிட்டு சென்னைக்கு திரும்பி வரவும் 16, 17, 18 ஆகிய தேதி களில் அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 4,830 சிறப்பு பேருந்துகள் 3 நாட் களும் இயக்கப்படுகின்றன. மொத் தம் 11,130 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment