தமிழர் திருநாள், பொங்கல் விழா, சுயமரியாதை குடும்ப விழா, பெரியார் விருது வழங்கும் விழா, கலை நிகழ்ச்சிகள் (சென்னை பெரியார் திடல் - 17.1.2024) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 18, 2024

தமிழர் திருநாள், பொங்கல் விழா, சுயமரியாதை குடும்ப விழா, பெரியார் விருது வழங்கும் விழா, கலை நிகழ்ச்சிகள் (சென்னை பெரியார் திடல் - 17.1.2024)

featured image

மாலை 4.00 மணிக்கு அன்னை மணியம்மையார் சிலை அருகில் சுனில் வசீகரனின் விளரி இசைத்திரள் வழங்கிய இன எழுச்சி பறை முழக்கம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி தலைமையில் தலைமை கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


தவத்திரு குன்றக்குடி அடிகளார் படத்தினை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உ பலராமன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ‘காமராஜ் விருதை’ வழங்கியது அவரைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார். உடன்: சிறப்பு விருந்தினர்கள் உள்ளனர்.


கலை நிகழ்ச்சி நடத்திய தோழர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டு

No comments:

Post a Comment