பெரியார் விடுக்கும் வினா! (1221) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 24, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1221)

featured image

குழவிக்கல்லுக்கு அழுவதால், பார்ப்பான் ஒருவன் தானே கொழுக்கிறான். இந்தக் குழவிக்கல் கொள்ளையை அனுமதிக்கலாமா நீ? இந்தக் குழவிக் கல்லுக்காக வேண்டி உன்னை மொட்டை அடித்துக் கொள்ளலாமா நீ? புத்தியிருக்கிறதா உனக்கு? இந்தச் சாமியை உனக்குக் காட்டிக் கொடுத்தவன் பார்ப்பான்தானே! அந்தப் பார்ப்பான ஒருவனாவது சாமிக்கென்று மயிர் வளர்த்து மொட்டை அடித்துக் கொள்கிறானா? அப்படியிருக்க நீ மட்டும் ஏனப்பா – மகா கடவுளைக் கண்டு விட்டவன் போல் – அதற்கு மயிரைச் சிரைத்துக் கொடுக்கிறாய்? அதற்காக ஏனப்பா நீ காவடி தூக்கிக் குதிக்கிறாய்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment