சென்னை, ஜன.28 தமிழ்நாட்டில் 11 காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
திருவள்ளூர் எஸ்.பி: சீனிவாசபெருமாள், திருப்பூர் மாவட்ட எஸ்.பி.: அபிஷேக் குப்தா, தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.: பகோர்லா செபாஸ் கல்யாண், சிஅய்டி பாதுகாப்பு பிரிவு எஸ்.பி: சக்திவேல், சென்னை கொளத்தூர் துணை ஆணையர்: பாண்டியராஜன், தெற்கு சரக லஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி.: சாமிநாதன், உளவுப்பிரிவு, தடை செய்யப்பட்ட குற்றங்கள் பிரிவு எஸ்.பி.: சியாமளா தேவி, வடக்கு சரக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி.: சரவணகுமார், கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையர்: ரோஹித் நாதன் ராஜகோபால், திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையர்: ராஜராஜன், நெல்லை தலைமையிட துணை ஆணையர்: அனிதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment