புயலால் ஏற்பட்ட கடும் மழை - மக்களை காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தலைமைச் செயலாளர் - உயர் அதிகாரிகள் கூட்டாக பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 7, 2023

புயலால் ஏற்பட்ட கடும் மழை - மக்களை காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தலைமைச் செயலாளர் - உயர் அதிகாரிகள் கூட்டாக பேட்டி

featured image

சென்னை, டிச. 7- புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:

சென்னையில் பல இடங் களில் தண்ணீர் தேக்கம் குறைந்து வருகிறது. நீர் தேங் கிய பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வரு கின்றன. 32,158 பேர் வெள்ளம் சூழப்பட்ட இடங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங் களில் 3.5 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகம். ஆவின் மூலம் 1.26 லட்சம் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது. செம்பரம் பாக்கம் ஏரியில் இருந்து 6,000 கன அடி நீர் வெளியேற்றம். 42 மணி நேரம் பெய்த மழையால் சென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,200 படகுகள் சேதமடைந்து உள்ளன. 30 படகுகள் முழுவது மாகவும் 90 படகுகள் பகுதி யாகவும் சேதமடைந்துள்ளன.
சென்னை மாநகரில் 80 சதவீத மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து 139 படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர். தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப் படாமல் இருக்க நிறுவனங்களு டன் பேசி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தொலைத்தொடர்பு சேவை 70 சதவீதம் செயல் பாட்டில் உள்ளது. மின் விநியோகம் சீராக சீராக தொலைத் தொடர்பு சேவையும் சீராகும். 4 மாவட்டங்களில் உள்ள 900 பெட்ரோல் பங்குகளில் 805 பெட்ரோல் பங்குகள் செயல் பட்டு வருகின்றன. மீதமுள்ள 95 பெட்ரோல் பங்குகளை செயல்பாட்டுக்கு கொண்டுவர நிறுவனங்களுடன் பேசி நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மீனவர் பகுதிகளில்…

ஆவடியில் 3,375 பேர், தாம் பரத்தில் 5,000-க்கும் மேற்பட் டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீனவர் பகுதிகளில் இருந்து 40 படகுகள் கொண்டு செல்லப் பட்டு மீட்புப் பணி நடந்து வருகிறது. உயிரிழப்பு ஏற்படு வதை தடுப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம்.. மடிப் பாக்கம், பெருங்குடி, பள்ளிக் கரணை பகுதிகளில் தான் 2 நாட்களில் 73 செ.மீ வரை மழை பெய்துள்ளது. மடிப்பாக் கம், பெருங்குடி, பள்ளிக்கரணை பகுதிகளில் ஓரிரு நாட்களில் மழைநீர் வடியும். 3 மாதங்களில் பெய்யும் மழை 2 நாட்களில் பெய்ததால் மழைநீர் தேங்கியுள்ளது.

மோட்டார் பம்புகள்

கோவை, திருச்சி, நெய்வேலி யில் இருந்து அதிசக்தி கொண்ட மோட்டார் பம்புகள் கொண்டு வரப்பட்டு மழை நீரை அகற் றும் பணி நடந்து வருகிறது. 30 இடங்களில் இருந்து அடை யாறு ஆற்றில் 40,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 40,000 கனஅடி நீர் பெருக் கெடுத்து செல்வதால் அடை யாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது புயலோடு சேர்ந்து இதுவரை இல்லாத அளவு கனமழை பெய்ததால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2015இல் தென்சென்னை பகுதி யில் மட்டும் தான் மிக கனமழை பெய்தது.

பேருந்துகள் இயக்கம்

தற்போது அனைத்து இடங்களிலும் மிக கனமழை பெய்துள்ளது. ஆனால் 70 சதவீதம் பேருந்துகள் இயங்கு கின்றன. இயல்பு நிலைக்கு விரைவில் திரும்ப வேண்டும் என்பதே இலக்கு. மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு தயாரித்து வழங்க சென்னை மாநகராட்சியில் வசதி உள்ளது.

தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ்குமார் பேட்டி

பள்ளிக்கரனை, பெரும்பாக் கம் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்க படகுகள் தயாராக உள் ளன. மாநகராட்சி பகுதிகளில் விழுந்துள்ள மரங்கள் உடனே அகற்றப்பட்டு வருகின்றன. மற்ற நகரங்களில் இருந்தும் தீயணைப்புத்துறையினர் சென்னைக்கு வரவழைக்கப் பட்டு மீட்புப் பணிகள் தீவிர மாக நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் சிக்கிய 1,880 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளார். 25 இடங்களில் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள கால் நடைகளும் தீயணைப்புத்துறை மூலம் மீட்கப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கியதாக 4,339 புகார்கள் வந்துள்ளன. அனைத்தும் பரிசீலித்து நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது. மழையால் விழுந்த 300-க்கும் மேற்பட்ட மரங்களில் 191 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது, மீதமுள்ள மரங்களை அகற் றும் பணி நடந்து வருகிறது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்று தீயணைப்பு காவல் துறை தலைமை இயக்குநர் ஆபாஷ் குமார் பேட்டி அளித்துள்ளார்.

மின்சாரத்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி

பாதுகாப்பு கருதியே சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வடிந்தவுடன் மீத முள்ள பகுதிகளில் மின் விநி யோகம் செய்யப்படும். மற்ற மாவட்டங்களில் இருந்து 1,050 பேர் மின்சார சீரமைப்புப் பணிகளுக்காக வந்துள்ளனர். மேலும் 1,500 பேர் வரவழைக் கப்படுவர் என்று மின்சாரத் துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி பேட்டி அளித்து உள்ளார்.

காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீராகி வருகிறது. தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவை சேர்ந்த 12 குழுக்கள் மீட்புக் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மாநகரம் முழுவதும் 18,000 போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் தேவைக்கேற்ப பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை முழுவதும் 800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட் டங்களில் பேருந்துகள் இயக் கப்பட்டு வருகின்றன என்று காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி அளித்து உள்ளார்.

நிதித்துறை செயலாளர் முருகானந்தம்

சென்னை மழை வெள்ள சேதங்களை பார்வையிட வரு மாறு ஒன்றிய குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று நிதித்துறை செய லாளர் முருகானந்தம் பேட்டி அளித்துள்ளார்.

சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் 19 சுரங்கப் பாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment