லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 7, 2023

லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள்

மதுரை, டிச. 7- மதுரையில் சோதனை நடத்த சென்றபோது, பணி செய்யவிடாமல் தடுத்து இடையூறு செய்ததாக மதுரை அமலாக்கத் துறைக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், மதுரை தல்லாகுளம் காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றிய அங்கித் திவாரி திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபு என்பவரிடம் அவருக்கு எதிரான வழக்கை (சொத்துக் குவிப்பு) மீண்டும் விசாரிக்காமல் இருக்க, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கினார். இது தொடர்பாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் டிச.1ஆ-ம் தேதி அங்கித் திவாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், அங்கித் திவாரி பணியாற்றிய மதுரை தபால் தந்தி நகரிலுள்ள அமலாக்கத் துறை துணை மண்டல அலுவலகத்தில் டிச.1ஆ-ம் தேதி மதியம் சோதனை நடத்த மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யசீலன் உள் ளிட்ட காவல் துறையினர் சென் றனர். அவர்களை அங்கிருந்து அமலாக்கத் துறை அதிகாரிகள், எங்களது உயரதிகாரியின் அனு மதியின்றி உள்ளே அனுமதிக்க முடியாது என வாக்குவாதம் செய்தனர். இருப்பினும், நீதிமன் றம், அமாலாக்கத் துறை உயர் அதிகாரியின் அனுமதியை ஏற்கெ னவே பெற்றிருந்ததால் லஞ்ச ஒழிப்புத் துறையினர், அங்கித் திவாரியின் அறையில் மாலை முதல் அடுத்த நாள் காலை 7 மணி வரை விடிய விடிய சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையின் மூலம் அங்கித் திவாரி அறையில் இருந்து சில ஆவணங்களும், அவ ரது வீட்டில் நடத்திய சோதனை யில் மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களும் விசாரணைக்கென கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறை தரப்பில் தெரிவிக் கப்பட்டது.
இந்நிலையில், மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள் ளது. அதில், லஞ்ச ஒழிப்புத் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்த அமலாக்கத் துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப் பிட்டுள்ளதாக தெரிகிறது.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறுகையில், ”சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாக திண் டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டார். இதையொட்டி நீதிமன்றம் மற்றும் அமலாக்கத் துறையின் உயரதிகாரி ஒருவரின் அனுமதியை பெற்று மதுரை துணை மண்டல அமலாக்கத் துறையில் சோதனைக்கு சென் றோம். எங்களை உள்ளே விடா மல், அரசுப் பணி செய்யவிடாமலும் அங்கிருந்து அதிகாரிகள் தடுத் தனர். வேறு வழியின்றி காவல் துறையின் பாதுகாப்புடன் சோதனை நடத்தினோம். வழக்கு தொடர்பாக அங்கித் திவாரி அறையில் மட்டுமே சோதனையிடப்பட்டது. எங்களை பணி செய்யவிடாமல் தடுத்து, இடையூறு செய்தவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

No comments:

Post a Comment