தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் - மூன்றாண்டு பணி நீட்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 1, 2023

தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் - மூன்றாண்டு பணி நீட்டிப்பு

சென்னை, டிச.1  தமிழ்நாடு சட்டப் பேரவை செயலாளர் கி.சீனிவாசனின் பதவி 3 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப் பட்டுள்ளது. 

தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாள ராக இருந்த பூபதி ஓய்வு பெற்றதை அடுத்து கி.சீனிவாசன் பேரவை செய லாளராக கடந்த 2018 மார்ச்சில் நிய மிக்கப்பட்டார். 

இந்நிலையில் சீனிவாசன் பதவிக்காலம் நேற்றுடன் 30.11.2023 முடிவடைந்தது. இதையடுத்து தமிழ்நாடு அரசு அவரது பதவிக்காலத்தை மேலும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், ”சட்டப் பேரவை செயலாளர் கி.சீனிவாசன்   ஓய்வு பெறவிருந்த நிலையில் அவருக்கு முதன்மை செயலாளராக பதவி உயர் வுடன் மூன்று ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப் பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை நேற்று முகாம் அலுவலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் கி.சீனி வாசன் சந்தித்து பணி நீட்டிப்பு, முதன்மை செயலாளராக பதவி உயர்வு வழங்கியமைக்காக நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.


No comments:

Post a Comment