மழை வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழை கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 10, 2023

மழை வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழை கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

featured image

சென்னை, டிச.10 மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம்கள் நடத்த முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை மாவட் டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் பல்வேறு மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மழை, வெள்ள பாதிப்பால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப் பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் உள் ளிட்ட அரசு ஆவணங்களை இழந்த வர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், சிறப்பு முகாம்களை நடத்தி, பொது மக்களுக்கு கட்டணமின்றி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், காஞ்சிபுரம், திரு வள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட் டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில், குறுவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் வரும் 11ஆம் தேதியும், சென்னை மாவட்டத்தில், சென்னை மாநகராட்சியின் கோட்ட அலுவலகங் களில் வரும் 12ஆம் தேதியும் தொடங் கப்படும். சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிக்கப்படும். மேற்படி சிறப்பு முகாம்களில், பொதுமக்களின் வச திக்கென, இ-சேவை மய்யங்களும் செயல் பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment