நெஞ்சுத் துணிவுக்கு ஒரு பெரியார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 23, 2023

நெஞ்சுத் துணிவுக்கு ஒரு பெரியார்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் பேசிய பேச்சு இன்னும் நினைவில் நிற்கிறது.
பேச்சுத் தொடக்கத்தில் பெரியார், ‘பெரியோர்களே, தாய்மார்களே’ என்று பேசத் தொடங்காமல் எடுத்த எடுப்பிலேயே, “ஏ முட்டாள்களே! மடையர்களே” என்று தொடங்கினார்.

சலசலப்பு

கூட்டத்தில் ஒருசிறு சலசலப்புக் கேட்டது. ஆயினும் அவர் தொடர்ந்து பேசினார். “எல்லோரும் பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது தாய்மார்களே, பெரியோர்களே, தோழர்களே” என்று தான் பேச்சை ஆரரம்பிப்பார்கள். இவன் என்னடா முட்டாள்களே, மடையர்களே என்று பேசுகிறான்னு யோசிக்கிறீங்களா? நீங்க எல்லாரும் அறிவாளிகள் மாதிரியா நடந்துகிறீங்க!
இப்படிக் கூறிவிட்டு வரிசையாக சமூகத்திலே நடைபெறுகிற ஒவ்வொரு மூடச் செயல்களையும் பிட்டுப் பிட்டு வைத்து இப்படியெல்லாம் நடந்துக்கிறீங்களே, ஒங்களை எவன் அறிவாளின்னு பாராட்டுவான்! மடையன் முட்டாள்னுதான் சொல்லுவான். நீங்க எல்லோரும் இனிமேலானாலும் திருந்திக் கொள்ளணும்னுதான் நான் கொஞ்சம் முரட்டுத் தனமாகவே பேசிவர்றேன்” என்றார்.

பெரியாரைத் தவிர வேறு யாரேனும் இது போன்று பேசத் தொடங்கியிருந்தால், கல்மழை அல்லவா அவர்களை வரவேற்றிருக்கும்!

No comments:

Post a Comment