மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் தேவையென்றால் முதலமைச்சர் நேரில் விளக்கமளிக்க வேண்டுமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 8, 2023

மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் தேவையென்றால் முதலமைச்சர் நேரில் விளக்கமளிக்க வேண்டுமாம்!

கேரள ஆளுநரின் ஆணவம்

திருவனந்தபுரம்,டிச.8- மசோதா அல்லது அவசரச் சட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றால், அதுகுறித்து ஆளுநர் மாளிகைக்கு வந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருவனந்த புரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“என்னிடம் ஊடகங்கள் வாயிலாக மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பேச வேண்டாம். எந்தவொரு மசோதா அல்லது அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என் றால், ஏன் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகைக்கு வந்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.
அவ்வாறு விளக்கம் அளிக்கப் பட்டால், பாரபட்சம் இல்லாமல் எந்தவொரு மசோதா, அவசரச் சட்டம் அல்லது பரிந்துரையை தகுதி அடிப்படையில் பரிசீலிப் பேன் என உறுதி அளிக்கிறேன் என்றார்.

கேரளத்தில் உள்ள கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தராக கோபிநாத் ரவீந்திரனை மறு நியமனம் செய்ய மாநில அரசு பரிந் துரைத்தது. அந்தப் பரிந்துரைக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் அளித்தார். இதற்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை நியமிக்கவோ, மறு நியமனம் செய்யவோ ஆளுநர் மட்டுமே தகுதியுடையவர். ஆனால், ரவீந்திரனின் மறு நியமனத்தில் மாநில அரசின் தலையீடு இருந்தது தெளிவாகத் தெரிகிறது’ என்று கூறி, ரவீந்திரனின் மறுநியமனத்தை அண்மையில் ரத்து செய்தது.
இது தொடர்பாக ஆளுநர் ஆரிஃப் செய்தியாளர்களிடம் கூறு கையில், ‘ரவீந்திரனின் மறு நியமன விவகாரத்தில் மாநில அரசின் தலைமை வழக்குரைஞரிடம் ஆலோசனை கோரினேன். அப் போது ரவீந்திரனை மறு நியமனம் செய்யலாம் என்று அரசுத் தலைமை வழக்குரைஞர் கூறினார். அவர் சட்டரீதியாக அளித்த ஆலோ சனையைத் தொடர்ந்து, அந்த விவகாரத்தில் மாநில அரசின் அழுத்தத்துக்கு அடிபணிந்தேன். எனினும் நான் செய்தது தவறு என்பதை ஊடகத்தின் முன்பாக ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.

தற்போது மாநிலத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவி நீண்ட காலமாக காலியாக உள்ளது. அதற்கு மாநில அரசே காரணம். உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பல் கலைக்கழகங்களின் வேந்தராக துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசின் அறிவுரைகளை ஏற்கத் தயார். ஆனால், அரசின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டேன்” என்றார்.

No comments:

Post a Comment