புயல் பாதிப்பு: குடும்ப அட்டை, ஆதார் அட்டைகள் பெற இன்று முதல் சிறப்பு முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 12, 2023

புயல் பாதிப்பு: குடும்ப அட்டை, ஆதார் அட்டைகள் பெற இன்று முதல் சிறப்பு முகாம்

featured image

சென்னை, டிச.12- சென்னையில் புயல் வெள்ளத்தால் பாதித்த சான்றிதழ்களை மீண்டும் பெற இன்று முதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்பு, இறப்பு, ஜாதி, இருப்பிடம், வாரிசு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் கட்டணமின்றி பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் மாநகராட் சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்க ளிலும் இழந்த அரசு சான்றிதழ்களை மீண்டும் பெற இன்று (டிச.12) முதல் சிறப்பு முகாம்கள் தினந்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படவுள்ளன.

அதன்படி திருவொற்றியூர், மணலி, புழல், மாதவரம், அம்பத்தூர், பாடி, அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், மயிலாப் பூர், தேனாம்பேட்டை, திருவல்லிக் கேணி, கோடம்பாக்கம், தி.நகர், போரூர், வேளச்சேரி, அடையாறு, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உட்பட 46 பகுதி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment