பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் - திருக்கானூர்பட்டி ஊராட்சி மன்றமும் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 7, 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் - திருக்கானூர்பட்டி ஊராட்சி மன்றமும் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழா!

featured image

வல்லம், டிச. 7 – தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானூர்பட்டி கிராமம், தேவாரம் நகர் பகுதியில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயற்பியல் துறை மற்றும் திருக்கானூர்பட்டி ஊராட்சி மன்றம் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் தூய்மைப் பணி விழா 27.11.2023 அன்று நடை பெற்றது.

விழாவினை, திருக்கானூர்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஒய். சேவியர் துவங்கி வைத்தார். திருக் கானூர்பட்டி ஊராட்சி மன்ற 1ஆவது வார்டு உறுப்பினர் சி.சந் திரசேகரன் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன இயற்பியல் துறை பேராசிரியர்கள் முனைவர் க.கேசவன், முனைவர் த.பாக்ய ராஜ், பேரா. ஜெ.சிறீவிந்த் ஆகி யோர் விழாவினை ஒருங்கிணைத்து நடத்தினர். இயற்பியல் துறை மாணவர்கள் தேவாரம் நகர் பொதுமக்கள் மற்றும் மகளிர் கலந்து கொண்டு அப்பகுதியை தூய்மைப்படுத்தியும், மரக்கன்று களை ஊன்றியும் விழாவினை நிறைவு செய்தனர்.

No comments:

Post a Comment