ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமி மீட்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 7, 2023

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமி மீட்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

போபால், டிச.7 மத்தியப்பிரதேச மாநிலம் ராஜ்கர்க் மாவட்டம் பிப் லியா ரசொடா கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மகி. சிறுமி 5.12.202 அன்று கிராமத்தில் தனது மாமா வீட்டின் பின்புறம் உள்ள தோட் டத்தில் விளையாடிக்கொண்டிருந் தார். அப்போது, அங்கு உள்ள ஆழ் துளை கிணற்றுக்குள் விழுந்தார்.
இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் 22 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட சிறுமியை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆழ்துளை கிணற்றுக்கு அருகே புல்டோசர் மூலம் பள்ளம் தோண்டிய மீட்புக்குழுவினர், அதிகாலை 2.45 மணியளவில் சிறுமியை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமி உட னடியாக போபாலில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுமி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், அவர் சில நிமி டங்களில் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக் குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்
றனர்.

No comments:

Post a Comment