காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன : மம்தா கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 6, 2023

காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன : மம்தா கருத்து

தீகால்கத்தா,டிச.6- மூன்று மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தற்கான காரணம் குறித்து, மேற்கு வங்க முதலமைச்சரும், திரிண மூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா  கருத்து தெரிவித்துள்ளார்.

"இந்தியா" கூட்டணி

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் மாநி லங்களில் பாஜகவிடம் காங் கிரஸ் ஆட்சியை பறிகொடுத் தது. இந்த தேர்தல் தோல்வி யானது காங்கிரஸ் தலைமை வகிக்கும் "இந்தியா" கூட்டணி கட்சியினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள் ளது. இந்நிலையில் "இந்தியா" கூட்டணியில் உள்ள திரிண மூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா  தேர்தல் முடி வுகள் தொடர்பாக கூறிய தாவது:

தெலங்கானாவில் காங் கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தானிலும் காங்கிர ஸால் வெற்றி பெற்றிருக்க முடியும். 

"இந்தியா" கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்து போட்டியிட்டதால் வாக் குகள் பிரிந்துவிட்டன. இது தான் உண்மை. தேர்தலில் உரிய பங்கீடுகளை செய்யு மாறு நாங்கள் அறிவுறுத்தி யிருந்தோம். வாக்குகள் சிதறியதாலேயே காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளது. சித்தாந்தத்துடன், வியூகமும் தேவை. 2024 தேர்தலில் "இந்தியா" கூட்டணி கட்சிக ளிடையே உரிய தொகுதி பங்கீடு ஏற்படுமேயானால் நிச்சயமாக பாஜகவால் மீண் டும் ஆட்சிக்கு வர முடியாது. அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலின்போது நாங்கள் இணைந்து, தவறுகளை சரி செய்து போட்டியிடுவோம்.இவ்வாறு மம்தா  தெரிவித்தார்.


No comments:

Post a Comment