நான்கு மாவட்ட குடும்பங்களுக்கு ரூ.6,000, சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.8,000, உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூபாய் 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 10, 2023

நான்கு மாவட்ட குடும்பங்களுக்கு ரூ.6,000, சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.8,000, உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூபாய் 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை

featured image

சென்னை,டிச.10- மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவா ரணத் தொகை மற்றும் உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று (9.12.2023) தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை மாவட்டத் தில் கடுமையான மழைப்பொழிவு ஏற் பட்டது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திரு வள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப் பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. முன்னதாக, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீய ணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப் பட்டிருந்தனர். மீட்புப் பணிகளுக்குத் தேவையான டீசல் மோட்டார் பம்புசெட் டுகளும், படகுகளும், ஜேசிபி இயந்திரங் களும், மரம் அறுக்கும் கருவிகளும் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இவை புயல் மழைக்குப் பிறகு உடனடியாக களத்தில் மீட்புப் பணிகளில் பயன்படுத்தப்பட்டன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக 20 அமைச் சர்கள், 50-க்கும் மேற்பட்ட அய்ஏஎஸ் மற்றும் அய்பிஎஸ் அதிகாரிகளும் நிய மிக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதுமட்டுமின்றி, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் வாரி யப் பணியாளர்களும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களும், ஆயிரக்கணக்கான தூய்மைப் பணி யாளர்களும் ஈடுபட்டனர்.

மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட் டங்களில், மக்களை மீட்க சுமார் 740 படகுகள் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

சென்னை மாவட்டத்தில் மட்டும் கடந்த 8-ஆம் தேதி வரை 3 வேளை உணவாக, மொத்தம் 47 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இதுவரை 51 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட் டுள்ளன. பால் பவுடர் – 58,222 கிலோ, குடிநீர் பாட்டில்கள் – 9,67,000 எண் ணிக்கை, பிரட் பாக்கெட் – 2,65,000 எண் ணிக்கை, பிஸ்கட் பாக்கெட் – 10,38,175 எண்ணிக்கையில் வழங்கப்பட்டுள்ளன.
வெள்ளம் வடிந்துள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் தற்போது 25 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணி யாளர்களை ஈடுபடுத்தி போர்க்கால அடிப்படையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிவாரண உதவித் தொகை

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று (9.12.2023) முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன் அடிப்படையில், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக
ரூ.6 ஆயிரம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையை, பாதிக் கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதி களில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந் தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூ.5 ஆயிரத்தை ரூ.8 ஆயிரமாகவும், மழையால் பாதிக்கப்பட்ட (33% மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக் டேர் ஒன்றுக்கு ரூ.13,500-இல் இருந்து ரூ.17 ஆயிரமாகவும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேத முற்றிருப்பின் (33% மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன் றுக்கு ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.22,500 ஆகவும், மழையால் பாதிக்கப்பட்ட (33% மற்றும் அதற்கு மேலாக) மானா வாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன் றுக்கு ரூ.7,410-இல் இருந்து ரூ.8,500 ஆகவும் உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

எருது, பசு உள்ளிட்ட கால்நடை களின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000 என்றிருந்ததை ரூ.37,500 ஆகவும், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.3,000 என்றிருந்ததை ரூ.4,000 ஆகவும், சேத மடைந்த படகுகள் மற்றும் வலை களுக்கான நிவாரண உதவிகளைப் பொறுத்தவரை, முழுமையாக சேத மடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), ரூ.32,000-இல் இருந்து ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்தில் இருந்து, ரூபாய் 15 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப் படும் அதிகபட்ச மானியத் தொகை ரூ.75 ஆயிரத்தில் இருந்து, ரூ.1 லட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.50 லட்சமாகவும், சேத மடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட் டுள்ளார்.

குடும்ப அட்டை இல்லாதவர்களும் சென்னையில் வசித்து பாதிக்கப்பட் டிருந்தால், அவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும், அவருக்கும் நிவா ரண தொகை ரூ.6,000 வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொக்கமாக ஏன்?

2015 மழை பாதிப்பின்போது நிவா ரண தொகை ரூ.5,000 வங்கி கணக்கு களில் போடப்பட்ட நிலையில், இம் முறை ஏன் நிவாரண தொகை ரொக்க மாக வழங்கப்படுகிறது என்பதற்கு தமிழ் நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், சென்னை, புறநகர் பகுதிகளில் பெரும்பாலான ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை என வங்கிகள் சார்பில் அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் பலருக்கு வங்கி கணக்கு இல்லை. அதனால், நிவாரண தொகையை ரொக்கமாக தர முடிவெடுக்கப்பட்டது என தெரிவிக்கப் பட்டது.

No comments:

Post a Comment