‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும்சேதங்களை சரி செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்குக! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 6, 2023

‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும்சேதங்களை சரி செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்குக!

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, டிச.6 ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும்சேதங்களை சரி செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு. பிரதமரிடம் நேரில் வழங்குவார்

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக் கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங் கிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (5.12.2023) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில்,  தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய நாள்களில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது.  இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற் பட்டுள்ளன.  

சாலைகள், பாலங்கள், பொதுக் கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன.  மேலும், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப் பட்டுள்ளது. இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கு, இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின்கீழ் ரூ.5,060 கோடியினை உடனடியாக வழங்கிடு மாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திரமோடி அவர்களைக் கேட்டுக் கொண் டுள்ளார். 

மேலும், ‘மிக்ஜாம்’ புயலால் பெய்த கன மழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது தொடங்கப்பட் டுள்ளது என்றும், முழுவிவரங்கள் சேகரிக்கப் பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட ஒன்றிய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment