சென்னையில் டிச.3 - 8 வரையிலான போக்குவரத்து வழக்குகள் ரத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 10, 2023

சென்னையில் டிச.3 - 8 வரையிலான போக்குவரத்து வழக்குகள் ரத்து

சென்னை,டிச.10 – சென்னையில், மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால், டிசம்பர் 3 – 8ஆம் தேதி வரை போக்குவரத்து சந்திப்புகளில் அமைக்கப்பட் டிருக்கும் அதிநவீன கேமராக்கள் மூலம் பதிவான வழக் குகள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையின் பல்வேறு போக்குவரத்து சந்திப்பு களில் ஏஎன்பிஆர் கேமராக்கள் நிறுவப்பட்டு, அதன் மூலம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை யில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு சென்னையில் டிசம்பர் 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை போக்குவரத்து காவல்துறையின் கேமராக்கள் மூலம் பதிவான வழக்குகள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment