மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 6, 2023

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி

இம்பால், டிச. 6-  மணிப்பூரில் நடந்த வன்முறை நிகழ்வில் 13 பேர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலம் டெங்னோபால் மாவட் டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்த 13 பேரும் உயிரி ழந்ததாக பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக பாது காப்புப் படை தரப்பில், “டெங் பால் மாவட்டம் சைபால் பகுதியில் உள்ள லெய்து கிரா மத்தில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வந்தது.

நிகழ்வுப் பகுதியில் இருந்து 10 கிமீ தொலைவில் பாதுகாப்புப் படையினர் முகாம் ஒன்று இருந் தது. அந்த முகாமில் இருந்து பாதுகாப்புப் படையினர் லெய்து கிராமத்துக்குச் சென்ற போது சண்டை முடிந்திருந்தது. ஆனால் அங்கு 13 பிணங்கள் இருந்தன. அவற்றின் அருகே எந்த ஆயுதங்களும் இல்லை. உயிரிழந்தவர்கள் யாரும் லெய்து பகுதியைச் சார்ந்தவர் களைப் போல் இல்லை.

அவர்கள் வேறு ஏதாவது பகுதியில் இருந்து வந்திருக்க லாம். இங்கு ஏதேனும் ஆயுதக் குழுவுடன் மோதலில் ஈடுபட்டி ருக்கலாம் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. அதேவேளையில் உயி ரிழந்த 13 பேரின் அடையாளத்தை காவல்துறையும், பாதுகாப்புப் படையினரும் வெளியிட வில்லை. பதற்றத்தை தணிக்க அப்பகுதி முழுவதும் பாது காப்புப் படையினர் குவிக்கப் பட்டுள்ளனர். மணிப்பூரின் மைத்தேயி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் முதல் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கலவரம் பரவி போர்க்களமாக மாறியது. 170க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்தனர். பல்லாயிரக்கணக்கா னோர் வாழ்வாதாரத்தை இழந் தனர். 

இந்நிலையில், சமீப கால மாக சற்றே அமைதி திரும்பியது. இந்நிலையில் தற்போது மீண் டும் அங்கு மோதல் வெடித்து 13 பேர் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment