வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 நாள்களுக்குள் நிவாரணத் தொகை தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 11, 2023

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 நாள்களுக்குள் நிவாரணத் தொகை தமிழ்நாடு அரசு அறிவிப்பு

featured image

சென்னை,டிச.11 – சென்னை யில் மிக்ஜாம் புயல் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் முதல மைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணத் தெகை வழங்கப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி சென்னை இன்னும் முழுமையாக மீளாத சூழலே நிலவுகிறது. பாதிக்கப் பட்டோருக்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன்கள் டிசம்பர் 16ஆம் தேதியில் இருந்து வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “புயலால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு வெள்ள நிவாரணமாக ரூ. 6 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன் டிசம்பர் 16ஆம் தேதியில் இருந்து வழங்கப் படும். பத்து நாள்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப் பட்டு விடும்,” என்று தெரிவித்தார்.

சென்­னையை அடுத்த மவு­லி­வாக்­கத்­தில் மழை­யால் பாதித்­த­வர்­க­ளுக்கு அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் ஏற்­பாட் ­டில் அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் 600 பேர்­க­ளுக்கு அரிசி, மளி­கைப் பொருட்­களை நேற்று (10.12.2023) வழங்­கி­னார். அப்­போது அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் செய்தியா ளர்­க­ளுக்கு பேட்டி அளித்­தார்.
அதன் விவ­ரம் வரு­மாறு:-

கேள்வி: சென்னை உள்­ளிட்ட 4 மாவட்­டங்­க­ளில் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணத் தொகை எப்­போது வழங்­கப்­ப­டும்?
உத­ய­நிதி ஸ்டாலின்: இன்­னும் ஒரு வாரத்­தில் வெள்ள நிவா­ர­ணம் வழங்­கத் தொ­டங்கி விடு­வோம். முத­லில் அதற்­கான டோக்­கனை கொடுக்க வேண்­டும். சில இடங்­க­ளில் ரேஷன் கடைகளில் தண்­ணீர் புகுந்­தது. அங்­கி­ருந்த பொருட்­க­ளும் சேதம் அடைந்­தன. அதை சரி செய்த பிறகு ஒரு வாரத்­தில் பொது­மக்­க­ளுக்கு டோக்­கன் வழங்­கப்­ப­டும். அதன் பிறகு வெள்ள நிவா­ர­ண நிதி வழங்­கப்­ப­டும்.

கேள்வி: சென்­னை­யில் மழை ­நீர் வடி­கால் பணி­கள் அமைத்­தது தொடர்­பாக வெள்ளை அறிக்கை வெளி­யிட வேண்­டும் என்று எதிர்க்­கட்­சி­கள் தொடர்ந்து கோரிக்கை வைக்­கி­றார்­களே?
உத­ய­நிதி ஸ்டாலின்: எதிர்க்­கட்­சி­கள் அப்­படி சொல்­லிக்­கொண்டு தான் இருப்­பார்­கள். நாம் நமது வேலை­யைப் பார்த்­துக்­கொண்டே இருக்க வேண்­டும்.

கேள்வி:-சென்­னை­யில் மழை­நீர் வடி­கால் பணி­களை திருப்­பு­கழ் குழு­வின் அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் அமைக்­க­வில்லை என்று குற்­றச்­சாட்டு எழுந்து உள்­ளதே?
உத­ய­நிதி ஸ்டாலின்: அப்­படி அமைத்­த­தால் தான் இவ்­வ­ளவு மழை பெய்­தும் 3 நாளில் மழை­நீர் வடிந்து மின்­சா­ரம் வந்­துள்­ளது. இல்­லா­விட்­டால் நிலைமை இன்­னும் மோச­மாகி இருக்­கும்.

கேள்வி: மழைச் சேதத்­தைப் பார்­வை­யிட வரும் மத்­தி­யக் குழு­வி­டம் என்­னென்ன விஷ­யங்­களை வலி­யு­றுத்த இருக்­கி­றீர்­கள்?
உத­ய­நிதி ஸ்டாலின்: ஏற்­கெ­னவே ஒன்­றிய பாது­காப்­புத் துறை அமைச்­சர் ராஜ்­நாத் சிங் வந்து வெள்­ளச் சேதத்­தைப் பார்­வை­யிட்­டார். அவ­ரி­டம் எவ்­வ­ளவு பெரிய அள­வில் சேதம் ஏற்பட்டுள்­ளது என்று முத­ல­மைச்­சர் விளக்­கிக் கூறி­யுள்­ளார். தற்­போது முதல் கட்ட நிதி கொடுத்து இருக்­கி­றார்­கள். விரை­வில் அடுத்த கட்ட நிதி­யைக் கொடுப்­பார்­கள் என்று நம்­பு­கி­றோம்.

கேள்வி: சென்­னை­யில் வெள்­ளம் பாதித்த ஒரு சில இடங்­க­ளில் மாமன்ற உறுப் பினர்கள் வந்து ஆய்வு செய்­ய­வில்லை என்று பொது­மக்­கள் குற்­றம் சாட்­டு­கி­றார்­களே?
உத­ய­நிதி ஸ்டாலின்: அனைத்து இடங்­க­ளி­லும் அமைச்­சர்­கள், மாமன்ற உறுப் பினர்கள் ஆய்வு செய்­துள்­ள­னர். மக்­கள் மத்­தி­யில் சின்ன அதி­ருப்தி இருக்­கத்­தான் செய் ­யும். இவ்­வ­ளவு மழை பெய்­ததை யாரும் எதிர்­பார்க்­க­வில்லை. இது கடந்த 50 ஆண்டு களில் பெய்­யாத மழை­யா­கும். ஓர­ள­வுக்கு என்­னென்ன செய்ய முடி­யுமோ அதை களத்­தில் இருந்து செய்து இருக்கிறோம். முத­ல­மைச்­சர், மேயர், அமைச்­சர்­கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் எல்­லோ­ருமே களத்­துக்கு வந்­த­னர். தன்­னார்­வ­லர்­கள்­கூட களத்­துக்கு வந்துள்ளனர். யாரை­யும் நான் குறை சொல்­ல­வில்லை.

-இவ்­வாறு அவர் கூறி­னார்.

No comments:

Post a Comment