தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?'' எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 15, 2023

தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?'' எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை

 ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு என்றால் தகுதி, திறமை போயிற்று - சட்டம் செல்லாது என்பார்கள்!

உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு என்றால் சட்டமும் வளைந்து கொடுக்கும் பா.ஜ.க. ஆட்சியில்!

சென்னை, நவ.15   ஒன்றிய பா.ஜ.க. அரசு, 50 சதவிகிதத் திற்குமேல் இட ஒதுக்கீடு சதவிகிதம் போனால், சட்டம் செல்லாது என்று சொல்லும். ஆனால், இவர்கள் விஷ யத்தில் 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போனால், சட்டம் வளைந்து கொடுக்கும். அதுவே, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்குக் கிடைத்தால், தகுதி போயிற்று - திறமை போயிற்று என்பார்கள். மற்றவர்களுக்கு எல்லாம் - ஏழைகள் என்றால், விளக்கம் வேறு. உயர்ஜாதி ஏழைகளுக்கு என்றால், விளக்கம் வேறு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?’’ சிறப்புக் கூட்டம்

கடந்த 8.11.2023 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் நடைபெற்ற ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?’’ சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

அவரது நிறைவுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

நாங்கள் பெரியார் கண்ணாடி போட்டுப் பார்க்கின்றோம்!

திறந்தவெளிப் போட்டி என்பது தனி - ஆனால்,  முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில், ஹண்டே அவர்கள் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபொழுது ஒரு விளம்பரம் வெளிவந்தது. நாங்கள் பெரியார் கண்ணாடி போட்டுப் பார்ப்பதினால், அந்தக் கிருமிகள் எல்லாம் டக்கென்று தெரிகிறது.

திறந்தவெளி போட்டி (ஓ.சி.) என்பதை Communities என்று போட்டார்கள்.

Other Communities  என்றால் என்ன அர்த்தம்?

50 சதவிகிதம் போக, மீதம் உள்ள 50 சதவிகிதமும் மற்றவர்களுக்கு என்று அந்த அர்த்தத்தையே தலைகீழாக மாற்றினார்கள்.

வழக்குத் தொடரவேண்டாம் என்றார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

அதற்காகப் போராடி, வழக்குப் போட்டோம். பிறகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களே நேரிடையாகப் பேசினார். ‘‘ஏன் வழக்குப் போட்டீர்கள்? என்னிடம் நீங்கள் சொல்லியிருக்கலாமே'' என்றார்.

நாங்கள் விளக்கத்தைச் சொன்னோம்.

‘‘ஓகோ, அப்படியா! நான் அமைச்சரிடம் பேசுகிறேன். நீங்கள் வழக்குத் தொடரவேண்டாம்; நான் அதனை உடனே மாற்றச் சொல்கிறேன்'' என்றார்.

உதாரணத்திற்காகத்தான் இந்தத் தகவலை உங் களுக்குச் சொன்னேன்.

50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போனால் தகுதி போயிற்று; திறமை போயிற்று என்று சொல் கிறார்கள்.

ஒரு நாளைக்கு 2,222 ரூபாய் வருவாய் பெறுபவர்கள் 

உயர்ஜாதி ஏழைகளாம்!

இப்பொழுது இங்கே அய்யா பாலச்சந்திரன் சொன்னார் பாருங்கள், EWS- உயர்ஜாதி ஏழைகள் என்று. உயர்ஜாதி ஏழைகளுக்கு விளக்கம் மிகவும் வித்தியாசமானது. ஏழைகளில் பல கேட்டகரியை உண்டாக்கினார்கள் அவர்கள். ஒரு நாளைக்கு 2,222 ரூபாய் யார் சம்பாதிக்கிறார்களோ அவர்கள் ஏழைகள்.

BPL என்று சொல்லக்கூடிய (Below the Poverty Line) அதில் நகரத்திற்கு 18 ரூபாய், கிராமத்திற்கு 12 ரூபாய் வருவாய் இருந்தால் ஏழைகள் என்று சொல்கிறார்களே, அதுபோன்று கிடையாது.

மற்ற ஜாதிகளில்தானே அதிக ஏழைகள் இருக்கிறார்கள்; உயர்ஜாதி ஏழைகள் என்று பிரிப்பதற்கு என்ன தேவை இருக்கிறது என்று கேட்டால், அதற்குப் பதில் இல்லை.

இவர்களுக்கு என்றால் சட்டம் வளைந்து கொடுக்கும்! 

இப்பொழுது உள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசு, 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு சதவிகிதம் போனால், சட்டம் செல்லாது என்று சொல்லும். ஆனால், இவர்கள் விஷயத்தில் 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போனால், சட்டம் வளைந்து கொடுக்கும். அதுவே, ஒடுக் கப்பட்ட சமுதாய மக்களுக்குக் கிடைத்தால், அப்போது தகுதி போயிற்று - திறமை போயிற்று என்பார்கள்.

மற்றவர்களுக்கு எல்லாம் - ஏழைகள் என்றால், விளக்கம் வேறு. உயர்ஜாதி ஏழைகளுக்கு என்றால், விளக்கம் வேறு. உயர்ஜாதிக்காரர்களில் ஏழைகளாக இருப்பவர்கள் என்றாலும் நிறைய படித்திருக்கிறார்கள்.

உயர்ஜாதி ஏழைகளில் யாராவது 100 நாள் வேலைத் திட்டத்திற்குப் போயிருக்கிறார்களா?

கிராமப்புற வறுமை ஒழிப்பிற்காக மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அந்தத் திட்டத்தில், இதுவரையில் உயர்ஜாதி ஏழைகள் என்று நீங்கள் வைத் திருக்கிறீர்களே, அந்த ஏழைகளில் யாராவது 100 நாள் வேலைத் திட்டத்திற்குப் போயிருக்கிறார்களா? அதற்குரிய அடையாளத்தைக் காட்ட முடியுமா? முடியவே முடியாது.

100 நாள் வேலை திட்டத்திற்காக நிதியை நாங்கள் ஒதுக்கமாட்டோம் என்கிறார்கள். அதற்காக கிராமத் திலிருக்கும் பெண்கள் உள்பட போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு இன்றைக்கு விவசாய வேலைகள் எதுவும்  இல்லை.

தந்தை பெரியார் காங்கிரசில் 1919 ஆம் ஆண்டு சேர்ந்ததிலிருந்து, வரிசையாகப் போராடி, சமூகநீதி, இட ஒதுக்கீட்டிற்காகப் போராடி, காங்கிரஸ் தலைமையில் பார்ப்பனர்கள் இருந்த காரணத்தினால், இட ஒதுக்கீட்டை - சமூகநீதியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று சொன்னவுடன், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியே வந்தார் தந்தை பெரியார்.

சமூகநீதிதான் வழிகாட்டி - பெரியாருடைய தத்துவங்கள்தான் வழிகாட்டும்!

எந்தக் காங்கிரஸ் நூறு ஆண்டுகளுக்குமுன்பு சமூகநீதியை, இட ஒதுக்கீட்டை  ஏற்கமாட்டேன் என்று சொல்லிற்றோ - அதே காங்கிரஸ் இன்றைக்கு சோனியா காந்தி அம்மையார் அவர்களானாலும், ராகுல் காந்தி அவர்களானாலும் - தலைகீழாக மாறி, மிகப்பெரிய அளவிற்கு, சமூகநீதிதான் வழிகாட்டி - பெரியாருடைய தத்துவங்கள்தான் வழிகாட்டும் என்று உறுதி பூண் டுள்ளனர்.

செய்தியாளர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி அவர்கள், ‘‘உங்களில் எத்தனை பேர் பிற்படுத்தப்பட்டவர்கள்’’ என்று புரியும்படி கேட்டிருக்கிறார்.

ஒன்றிய அரசின் 90 முக்கியத் துறைகளில் 

3 பேர்தான் பிற்படுத்தப்பட்ட 

சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்!

இந்தியா முழுவதும் உள்ள ஒன்றிய அரசு அலுவல கங்களில் 90 துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளில், 3 பேர்தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் ராகுல் காந்தி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் சொல்லாத ஒரு விஷயம் என்னவென்றால், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் எத்தனை பேர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந் தவர்கள் நீதிபதியாக இருக்கிறார்கள் என்பதுபற்றித்தான். ஏனென்றால், கடைசியாக முடிவு செய்வது அதுதான்.

ஆகவே, அந்த சூழ்நிலைக்குப் போகக்கூடிய அள விற்கு வரும்பொழுது, இன்றைக்கு இந்தியா முழுவதும் 5 மாநிலத் தேர்தல்களில் ஒரு சில மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்டது. மேலும் சில மாநிலங்களில் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று ஒன்றிய ஆட்சி செய்யும் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.காரர் களுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிட்டது. தோல்வி ஏற்படுவது உறுதி என்று தெரிந்துவிட்டது.

இதுவரை தென்னாட்டில்தான் அவர்களுக்குக் கதவு சாத்தப்பட்டது. வடநாட்டில் இருப்பவர்களுக்குப் புரியா மல் இதுவரையில் இருந்தது.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக வந்து, பெரியார் அங்கே போய் - மண்டல் காற்று வேகமாக வீசிற்று.

ஒருமுறை அல்ல நூறு முறை பிரதமர் பதவியை இழக்கத் தயார் என்றார் சமூகநீதிக்காவலர் பிரதமர் வி.பி.சிங்

‘‘சமூகநீதிக்காக நான் ஒருமுறை அல்ல - நூறு முறை வேண்டுமானாலும் பிரதமர் பதவியை இழப்பதற்குத் தயாராக இருக்கிறேன். இது என்னோடு முடிந்துபோய் விடாது. பின்னாளில் இது மிகவும் வேகமாக வேலை செய்யும்‘’ என்றார்.

இதுவரையில் இந்திய வரலாற்றில் இதுபோன்று சொன்ன பிரதமர்கள் யாரும் கிடையாது.

இன்றைக்கு அதனுடைய அடிப்படை மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்துவிட்டது. வடநாடு முழுவதும் அக்கொடி பறக்கக் கூடிய அளவிற்கு வந்தாகி விட்டது.

இன்றைக்கு ராஜஸ்தானில் என்ன சொல்லுகிறார்கள்? ‘‘அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆதிதிராவிடர்களை  அர்ச்சகர் ஆக்குவதற்குத் திட்டம் போடுகிறோம். பெண் களுக்குத் தமிழ்நாட்டில் என்னென்ன திட்டங்கள் இருக்கிறதோ, அதேபோன்று நாங்களும் கொண்டுவரத் தயாராக இருக்கிறோம்'' என்று தமிழ்நாட்டை வழிகாட்டியாகக் கொள்ளுகிறார்கள்.

ணிகீஷி என்ற உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்ற ஒன்றைக் கொண்டு வந்து, 4, 5 நாள்களுக்குள் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துவிட்டார்கள்.அரசமைப்புச் சட்டத் தத் துவத்திற்கே இது விரோதமானது. அரசமைப்புச் சட்ட அடிக்கட்டுமானத்திற்கே விரோதமானது.

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அவர்கள் 

எதிரிகள் இல்லையாம்!

இப்பொழுது திடீரென்று ‘ஞானோதயம்‘ வந்தவர் போன்று அமித்ஷா  சொல்கிறார், ‘‘நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு  எதிரிகள் அல்ல!’’ என்கிறார்.

இதைவிட ஒரு வேடிக்கை என்னவென்றால், ஆந்திரா மாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு நம்முடைய பிரதமர் வருகிறார். நல்லவாய்ப்பாக ஆந்திராவிற்காவது வந்தாரே? மணிப்பூர் போன்று புறக்கணிக்காமல் - மிசோராமிற்கும் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்குப் போக வில்லை. ஏனென்றால், அவருடைய முகத்தைக் காட்டி னால் விழுகின்ற ஓட்டுகளும் விழாது என்று 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சொல்லியிருக்கலாம். அதற் குரிய வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

‘இந்து' பத்திரிகையில் 

இன்று வெளிவந்துள்ள செய்தி!

இன்றைய ‘இந்து' பத்திரிகையில் வெளிவந்துள்ள ஒரு செய்தியை சொல்கிறேன்.

Social justice is BJP’s firm commitment, says PM Modi

‘‘சமூகநீதியின் அடிப்படையில் மிகவும் உறுதியாக, இருக்கிறார்களாம்.’’

உங்கள் சமூகநீதிக்கு என்ன விளக்கம்?

பசியேப்பக்காரனை வெளியே நிற்கச் சொல்வதுதான் உங்கள் சமூகநீதியா?

ஒரு நாளைக்கு 2,222 ரூபாய் வருமானம் உள்ளவர் களை உயர்ஜாதி ஏழைகள் என்று சொல்லி, சாப்பிட்ட வர்களை, அஜீரணக்காரர்களைக் கொண்டு வந்து, விருந்து சாப்பிடுங்கள் என்று சொல்லி, பசியேப்பக் காரனை வெளியே நிற்கச் சொல்வதுதான் உங்கள் சமூகநீதியா?

உள்ளொன்று வைத்து - புறமொன்று பேசுவதுதான் அவர்களின் வேலை.

தெலங்கானாவில் 

டெபாசிட் வாங்குமா பா.ஜ.க.?

தெலங்கானாவில் இவர்கள் போட்டியிலேயே இல்லை. காங்கிரசுக்கும் - பி.ஆர்.எஸ். கட்சிக்குமிடையே தான் போட்டி. மூன்றாவது இடத்தில்கூட  வருமா - பா.ஜ.க. டெபாசிட் வாங்குமா? என்று தெரியவில்லை. நோட்டாவுக்கும் - பா.ஜ.க.வும்தான் போட்டியா? என்று. தமிழ்நாடு போன்று அங்கேயும் இருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Prime Minister Narendra Modi has asserted that for his government “social justice is a firm commitment” and it has put the welfare and development of the poor, Backward Classes, SC/STs on the top priority with the various schemes attuned to benefit them the most across the country.

“We have 27 OBC ministers in the Centre for the first time after Independence. There are 85 OBC MPs, 365 OBC MLAs and 65 OBC MLCs. No other party can do it. Parties like the Congress and BRS will not allow the BCs and other weaker sections to develop or give them decision making roles,” he charged.

இதன் தமிழாக்கம் வருமாறு:

பிரதமர் நரேந்திர மோடி தனது அரசாங்கத்தின் நோக்கம்  ‘‘நாடு முழுவதும் சமூக நீதி என்றும், அதுவே எனது அரசின் அர்ப்பணிப்பு” என்றும், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர்,  தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலன் மற்றும் மேம்பாட்டிற்கு முதலிடம் கொடுத்துள்ள தாகவும், பல்வேறு திட்டங்கள் மூலம் அவர்களுக்கு அதிக பயன் அளிக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

“சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக 27 இதர பிற்படுத்தப்பட்ட அமைச்சர்கள்  உள்ளனர். 85 இதர பிற்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், 365 இதர பிற்படுத்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 65 இதர பிற்படுத்தப்பட்ட சட்டமேலவை உறுப்பினர்கள் உள்ளனர்.

இதுபோல் வேறு எந்த கட்சியும் செய்ய முடியாது. காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் போன்ற கட்சிகள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற நலிந்த பிரிவினரை முன்னேற்றவோ அல்லது அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வழங்கவோ மாட்டார்கள்,” என்று அவர் குற்றம் சாட்டினார்.

ஓநாய் ஒருபோதும் சைவம் ஆகாது!

சமூகநீதி - ஒடுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்று அந்த வார்த்தையை உச்சரித்தால்கூட ‘‘தீட்டாகி விடும்; கங்கா ஜலத்தில் வாய்க் கொப்பளிக்கவேண்டும்'' என்று நினைத்தவர்களுக்கு, இப்பொழுது அவர்களை யும் தாண்டி, அவர்கள் சொல்வது வித்தைக்காகத்தான் என்று எல்லோருக்கும் தெரியும். ஓநாய் சைவத்தைப் பற்றிப் பேசினால் எப்படி இருக்கும்? ஓநாய் ஒருபோதும் சைவம் ஆகாது என்று அனைவருக்கும் தெரியும்.

ஆந்திராவில் நடைபெற்ற மாநாட்டிற்கு என்ன பெயர் தெரியுமா?

Addressing a ‘Self respect for BCs’ public meeting at the Lal Bahadhur Stadium at Fatehmaidan in Hyderabad on Tuesday, Mr. Modi affirmed that It is only BJP and the NDA (National Democratic Alliance) which has given pride of place to the BCs and other weaker sections giving several prominent posts like the President -Dr. Abdul Kalam, Ramnath Kovind and now Draupadi Murmu - Lok Sabha Speakers like GMC Balayogi and others.

He explained about providing constitutional status to National Commission for BCs, quota in the Central educational institutions and the likes. Flagship schemes like toilets construction, housing under the PMAY, Ayushman Bharat medical insurance, PM Vishwakarma Yojana and others directly benefit the BCs for them to lead a ‘life of dignity and self-respect’, he noted.

(தொடரும்)


No comments:

Post a Comment