ராகுல் காந்தி கருத்து
ஜெய்ப்பூர், நவ.20 அதானிக்காக பிரதமர் மோடி 24 மணி நேரமும் உழைக்கிறார். 'பாரத் மாதாகி ஜே என்று சொல்வதற்கு பதிலாக 'அதானி கி ஜே' என்று முழக்கத்தை மாற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி சாட்டினார்.
ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல், வருகிற 25-ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி, புந்தி நகரில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது, பிரதமர் மோடி 2 இந்தியாக்களை உருவாக்க விரும்புகிறார். ஒன்று, அதானிக்கானது. மற்றொன்று, ஏழைகளுக்கானது. அதானிக்காக அவர் 24 மணி நேரமும் உழைக்கிறார். 'பாரத்மாதா கி ஜே' என்று முழக்கமிடுவதற்கு பதிலாக, 'அதானி கி ஜே' என்று அவர் முழக்கமிட வேண்டும்.
ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர்தான் பாரதமாதா. அவர்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படும் போதுதான், '
பாரதமாதாவுக்கு ஜே' என்பதில் அர்த்தம் இருக்கும். பிரதமர் மோடி என்ன ஆனாலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டார். காங்கிரசும், ராகுல் காந்தியும்தான் அதை செய்ய முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment