விக்கிரவாண்டி வருகை தரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு திண்டிவனம் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 29, 2023

விக்கிரவாண்டி வருகை தரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு திண்டிவனம் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

திண்டிவனம், நவ. 29- திண்டிவனம் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் மாவட்ட தலைவர் இர. அன்பழகன் தலைமையில் தந்தை பெரியார் படிப்பகத்தில் சிறப்பாக நடைபெற்றது. திண்டிவனம் மாவட்ட செயலாளர் செ.பரந்தாமன் அனைவரையும் வரவேற்று பேசினார். தலைமைக் கழக அமைப்பாளர் தா. இளம்பரிதி கருத்து ரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை செயலாளர் தா. தம்பி பிரபாகரன், திண்டிவனம் மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் ந.வா. ஏழுமலை, பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கிருட்டினமூர்த்தி, திண்டிவனம் நகர தலைவர் உ. பச்சை யப்பன், நகர செயலாளர் சு. பன்னீர்செல்வம், ஒலக் கூர் ஒன்றிய தலைவர் ஏ. பெருமாள், மாவட்ட இளைஞர் அணி தலைவர் கே. பாபு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஓவியர் செந்தில்,பெரியார் பற்றாளர் தோழர் கஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இளைஞரணி செயலாளர் மு. இரமேஷ் நன்றி கூறினார்.

திண்டிவனம் மாவட்ட கலந்துரையாடலில்,  டிசம்பர் 2 - ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்தநாளை முன் னிட்டு விடுதலை சந்தா சேர்ப்பது - கழகப் பொறுப் பாளர்கள் ஆளுக்கு குறைந்த பட்சம் 5ஆண்டு சந்தா வழங்குவது எனவும், டிசம்பர் 2 ஆசிரியர் பிறந்தநாள் அன்று விடுதலை சந்தாவை ஆசிரியரை  சந்தித்து நேரில் வழங்குவது எனவும், தோழமை கட்சி பொறுப் பாளர்களை சந்தித்து விடுதலை சந்தா பெறுவது எனவும், டிசம்பர் 1இல் மறைந்த மண்டல தலைவர் க.மு.தாஸ்-சின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்து வது எனவும், மறைந்த அம்மையார் சரோஜா தண்டபாணி யின் படத்திறப்பிற்கு டிசம்பர் 3இல் விக்கிரவாண்டி வருகை தரும் ஆசிரியருக்கு சிறப்பான வரவேற்பு தருவது  எனவும், மறைந்த திண்டிவனம் பகுத் தறிவாளர் கழக தலைவர் இரா. சாமிநாதன், விக்கிர வாண்டி அம் மையார் சரோஜா தண்டபாணி ஆகியோ ருக்கு இரங்கல் தெரிவித்தும்  தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

No comments:

Post a Comment