பழ. நெடுமாறனை சந்தித்து உடல் நலத்தினை விசாரித்தார் தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 5, 2023

பழ. நெடுமாறனை சந்தித்து உடல் நலத்தினை விசாரித்தார் தமிழர் தலைவர்


மதுரை குருநகரில் உள்ள பேங்க் காலனியில் உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பழ.நெடுமாறன் அவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, "தாய்வீட்டில் கலைஞர்", "ஆபத்து, ஆபத்து - மீண்டும் குலத்தொழில் திணிப்பா?", "மகளிர் இட ஒதுக்கீடும் சமூகநீதியும்", "ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் - ஏன்?", "சனாதன ஒழிப்பு ஹிந்துக்களுக்கு எதிரானதா?”, இன்றைய விடுதலை நாளிதழ் ஆகியவற்றை 

பழ.நெடுமாறன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வழங்கினார்.  பழ.நெடுமாறன் ”ஞாலத்தின் காலப் பெட்டகம்” என்ற சிந்துவெளி நாகரிகம் பற்றிய ஆய்வு நூலை வழங்கினார். உடன்: தலைமைக்கழக அமைப்பாளர் மதுரை செல்வம், பழ. நெடுமாறன் மகள் பூங்குழலி, மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், செயலாளர் சு.முருகானந்தம் ஆகியோர் உள்ளனர். (மதுரை - 5.11.2023)


No comments:

Post a Comment