இது வாரிசு அரசியல் இல்லையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 13, 2023

இது வாரிசு அரசியல் இல்லையா?

 கருநாடக மாநில பிஜேபி தலைவராக எடியூரப்பா மகன் நியமனம்

பெங்களூரு, நவ. 13 கடந்த மே மாதம் கருநாடகாவில் நடந்த‌ சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததால், மாநில தலைவராக இருந்த நளின் குமார் கட்டீல் தனது பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, எடியூ ரப்பாவின் மகன் விஜயேந்திரா உள்ளிட்டோர் அந்த பதவியை பிடிக்க முயற்சி மேற்கொண் டனர். 

இதனிடையே மேனாள் முதலமைச்சர் எடியூரப்பா டில்லி சென்று பாஜக மேலிடத் தலைவர்களை சந்தித்து தனது மகன் விஜயேந்திராவுக்கு வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத் தார். இதுகுறித்து பாஜக மேலி டத் தலைவர்கள் தேசிய‌ அமைப்பு செயலாளர் பி.எல்.சந் தோஷ், கருநாடக மூத்த தலை வர்களுடன் ஆலோசனை நடத் தினர். அப்போது பெரும்பா லான தலைவர்கள், எடியூரப்பா முதலமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்பட்டதால் அவர் சார்ந்த  லிங்காயத்து ஜாதியினர் பாஜக மீது அதிருப்தியில் உள் ளனர். கடந்த தேர்தலில் பாஜக தோற்றதற்கு அதுவும் முக்கிய காரணமாக அமைந்தது. எனவே எடியூரப்பாவின் குடும் பத்தாருக்கு முக்கியத்துவம் அளித்தால், மக்களவைத் தேர் தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா 10.11.2023 அன்று  இரவு, ‘‘கருநாடக மாநில பாஜக தலைவராக விஜயேந்திரா நியமிக்கப்படுகிறார்'' என அறிவித்தார். 

இந்நிலையில் எடியூரப்பா, ‘‘எனது மகனுக்கு மாநிலத் தலை வர் பதவி வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகி யோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கட் சிக்காக உழைக்க விஜயேந்திரா வுக்கு வாய்ப்பு வழங்கி இருக் கிறார்கள். வருகிற மக்களவைத் தேர்தலில் கடுமையாக உழைத்து பாஜகவை 25 இடங்களில் வெற்றி பெற செய்வதை உறுதி யாக கொண்டிருக்கிறோம்'' என தெரிவித்துள்ளார். 

வாரிசு அரசியல்

கருநாடக உள்துறை அமைச் சர் பரமேஷ்வர், ''நாட்டில் பிற கட்சிகளை வாரிசு அரசியல் செய்வதாக பாஜகவினர் விமர் சித்து வருகின்றனர். இப்போது எடியூரப்பாவின் மகனை தலை வராக அறிவித்து இருப்பதன் மூலம் பாஜகவினரே வாரிசு அரசியலில் ஈடுபடுவது உறுதி யாகியுள்ளது. கட்சியில் மிகவும் இளையவரான விஜயேந்திரா அனுபவம் குறைந்தவர்.  சட்ட மன்ற உறுப்பினராக பொறுப் பேற்று 6 மாதங்களே ஆன நிலையில், பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜகவில் இருக்கும் மூத் தவர்களை அக்கட்சி மேலிடம் அவமதித்துள்ளது''என விமர் சித்துள்ளார்.


No comments:

Post a Comment