ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 23, 2023

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை, நவ.23- முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஊக்கத்தொகை பெற விண்ணப் பிக்கலாம்.

இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் 21.11.2023 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் மாணவ -_ மாணவி களுக்கான ஊக்கத்தொகை திட் டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை மூலம் செயற் படுத்தப்படுகிறது.

அதன்படி, 2023-2024ஆம் கல் வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் ஆதிதிரா விடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிரா விடர் இன மாணவ _- மாணவிக ளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திட்ட விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவம் www.tn.gov.in/forms/deptname1 என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து பல் கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. 

முழுமையாக பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்கள் டிசம்பர் 31ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள், “இயக்குநர், ஆதிதிராவிடர் நல இயக்குநரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை-600005” என்ற முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்க வேண் டும். முந்தைய கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment