நீதிமன்றங்களை அணுக மக்கள் அஞ்சக்கூடாது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

நீதிமன்றங்களை அணுக மக்கள் அஞ்சக்கூடாது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

பெங்களூர், நவ.27 நீதிமன்றங் களை அணுக மக்கள் அஞ்சக் கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய்சந்திரசூட் தெரிவித்தார். அரசமைப்புச் சட்ட நாளையொட்டி உச்ச நீதி மன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ‘அரசியல் மாச்சரியங்களை அரசின் ஜனநாயக நிறுவனங்கள் மூலம் தீர்வு காண அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. நடை முறைகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வு காண நீதிமன்றங்கள் உதவுகின்றன.

இந்த முறையில் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் உள்ள ஒவ் வொருவருக்கும் அரசமைப்புச் சட்ட ஆளுகைக்கு உள்பட்டதா கும். கடந்த 70 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் மக்களின் நீதிமன்றமாக திகழ்ந்துள்ளது. நீதி கிடைக்கும் என்ற நம்பிக் கையுடன் ஆயிரக் கணக்கான மக்கள் உச்ச நீதிமன்ற படிகளில் ஏறினர்.. தனிமனித சுதந் திரம், பொறுப்பேற்பு விவகாரங்களி லும், கொத்தடிமைக்கு எதிரா கவும், பழங்குடியினர் தங்களின் நிலங்களைப் பாதுகாக்கவும், சமூக அநீதி, மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதற்கு எதி ராகவும், சுத்தமான காற்றுக் காகவும் மக்கள் நீதிமன்றங்களை அணுகி உள்ளனர் இவை நீதிமன்றங்கள் மீது மக்களின் எதிர் பார்ப்பையும் மக்களுக்கு நீதி மன்றங்கள் நீதி வழங்க வேண்டிய ஈடுபாட்டையும் காண்பிக் கின்றன. அரசமைப்பு நடப்பு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மக்கள் நேரடியாக கடிதம் எழுதலாம். இது உலகில் எந்த நீதிமன்றத்திலும் கிடையாது. உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் மக்கள் சார்ந்ததாக இருப்பது உறுதி செய்யப்படும் நீதிமன் றங்களை அணுக மக்கள் அஞ்சக் கூடாது. அனைத்து தரப்பு மக்களும் நீதிமன்ற நடைமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

நீதிமன்ற அறைகளில் என்ன நடைபெறுகிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவே நீதிமன்ற விசாரணைகள் தற் போது நேரலை செய்யப்படு கின்றன. வழக்கு விசாரணை விவரங்களை ஊடக, பத்திரி கைகள் தொடர்ந்து வெளியிடுவது நீதிமன்றங்கள் மீது மக்கள் கொண்டுள்ள ஈடு பாட்டை காண்பிக்கிறது செயற்கை நுண்ணறிவு, கணினி பயன்பாட்டில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடப்படுகிறது

நிகழாண்டு நவம்பர் 25 வரையில் 36,068 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் ஆங்கிலத்தில் வழங்கி உள்ளது இவை அனைத் தும் உச்ச நீதிமன்ற இணைத்தில் இலவசமாக உள்ளது இதில், ஹிந்தியில் மொழி பெயர்க் கப்பட்ட 21,388 தீர்ப்புகள் இன்று அறிமுகம் செய்யப் படுகிறது. 9,276 தீர்ப்புகள் தமிழ், பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், வங்காளி, உருது மொழிகளில் மொழி பெயர்க் கப்பட்டுள்ளது.

சிறைகளில் அதிக அளவில் விசாரணைக் கைதிகள் உள்ளதாக கடந்த ஆண்டு நிகழ்வில் குடிய ரசுத் தலைவர் வருத்தம் தெரிவித்திருந் தார். தேவையில்லாமல் விசா ரணைக் கைதிகள் சிறையில் இருப்பதைத் தடுக்க சட்ட நடை முறை களை எளிதாக்க நடவ டிக்கை எடுக்கப்படுகிறது’ என் றார்.  

இந்நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா, ‘சட்டங்கள் எளிமையாகவும் மனி தாபிமானம் உள்ளதாகவும் இளைய சமூகத்தினருக்கு ஏற்க வும் இருக்க வேண்டிய தேவை ஏற் பட்டுள்ளது என்றார்.


No comments:

Post a Comment