தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 14, 2023

தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை,நவ.14- தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரி களில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று (14.11.2023) நடைபெறவிருந்த  பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மறு தேர்வு குறித்த முழு விவரங்களை  http://dte.tn.gov.in   என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழை

கட்டணமில்லா எண் அறிவிப்பு

சென்னை,நவ.14- சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பிரச்சினைகளை தெரிவிக்க கட்டணமில்லா எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

1913 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என்று சென்னை மக்களுக்கு மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், 9445477205 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் மூலமும்  தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

044-25619206, 25619207, 25619208 ஆகிய எண்களில் அழைத்து மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment