காவல் பணியை செம்மைப்படுத்த பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் : தமிழ்நாடு அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 24, 2023

காவல் பணியை செம்மைப்படுத்த பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் : தமிழ்நாடு அரசு

சென்னை, நவ.24 சென்னை  அசோக் நகரில் உள்ள காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில்  காவல் ஆணையம் இயங்கி வருகிறது. காவல் பணியை செம்மைப்படுத்த பொதுமக் களிடம் இருந்து கருத்துகள் வரவேற் கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு நேற்று (23.11.2023)  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

 காவல்துறையின் பணியை செம்மையாக்கும் வண்ணம், தமிழ்நாடு அரசு 2022ஆ-ம் ஆண்டு 5ஆ-வது காவல் ஆணையம் அமைத்தது. சென்னை அசோக்நகரில் உள்ள காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில் இந்த காவல் ஆணையம் இயங்கி வருகிறது. காவல் பணியை  செம்மைப்படுத்த பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் வரவேற்கப்படு கின்றன. கருத்துகளை அஞ்சல் மூலம் தெரிவிக்க விரும்புபவர்கள், 'தலைவர், 5ஆ-வது காவல் ஆணையம், காவல் பயிற்சிக் கல்லூரி வளாகம், அசோக் நகர், சென்னை-93' என்ற முகவரிக்கும், மின்னஞ்சலில் அனுப்ப விரும்புவோர், fifthpolicecommision@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் கருத்துகளை அனுப்பலாம்.

நேரில் சந்தித்து மனு அளிக்க விரும்புவர்கள், வருகிற டிசம்பர் 5-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மேற்கண்ட முகவரிக்கு நேரடியாக சென்று கருத்துகளை சமர்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 9791987112 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment