ரேஷன் பொருள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது : ஊழியர்களுக்கு கட்டளை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 17, 2023

ரேஷன் பொருள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது : ஊழியர்களுக்கு கட்டளை

சென்னை, நவ.17  நியாயவிலை கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என் றும் சண்டையிடக்கூடாது என்றும்  நியாய  விலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. நியாய  விலை கடைக்கு உள்ளேயும் வெளியேயும் சுற்றுப்புறத்தை தூய்மை யாக பராமரிக்க வேண்டும் என்றும் நியாய  விலை கடை ஊழியர்கள், குடும்ப அட்டைதாரர்களிடம் கனி வோடு, மரியாதையாக, கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள் ளது. மேலும், தரம் குறைந்த அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment