சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை (27.11.2023), சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நிறுவப்பட்டுள்ள மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர்  வி.பி. சிங் அவர்களின் முழு உருவச் சிலையை சிறப்பு விருந்தினரான உத்தரப் பிரதேச மாநில மேனாள் முதலமைச்சர்   அகிலேஷ் யாதவ்,  வி.பி. சிங் அவர்களின் துணைவியார் சீதாகுமாரி,  மகன்  அஜயா சிங் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரது முன்னிலையில் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர்   துரைமுருகன்,  உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர்  எ.வ.வேலு,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்,  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்   மு.பெ. சாமிநாதன் உள்பட  அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள் மேனாள் உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர்  

சிவ் தாஸ் மீனா,  பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ்,  செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர்  த.மோகன்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment