வருந்துகிறோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 20, 2023

வருந்துகிறோம்

மேட்டூர் கழக மாவட்டம், எடப் பாடி, கவுண்டம்பட்டியில் வசிக்கும் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.பி. மெய்வேல் அவர்களின் வாழ் விணையர் மெ.பச்சமுத்து அம்மாள் (வயது 81) 18.11.2023 அன்று காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

தமிழ்செல்வி, பூங்கொடி, செல்வ ராணி, முத்தழகி, கனிமொழி, மணி யம்மை - ஆகிய ஆறு பெண் மக்க ளும், ஆசைத்தம்பி என்ற ஒரு மகனும் உள்ளனர். எல் லோரும் வியக்கும் வண்ணம் கொழுத்த இராகு காலத்தில் அனைவருக்கும் சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு, எடப்பாடி நகர துணைத் தலைவர் ஆர்.எம்.சண்முகசுந்தரம், நகர் மன்றத் தலைவர் ஜிலானி பாட்ஷா மற்றும் தோழர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

அவர்களது இல்லத்தில் மாலைக்குப் பதிலாக, அரை யாண்டு விடுதலை சந்தா ரூபாய் ஆயிரத்தை தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு வழங்கினார்.

No comments:

Post a Comment