காவிரி மேலாண்மை ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 1, 2023

காவிரி மேலாண்மை ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும்

புதுடில்லி, நவ.1 காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் அடுத்த கூட்ட‌ம் நாளை மறுதினம் (நவம்பர் 3-ஆம் தேதி) டில்லியில் நடைபெறுகிறது. 

நேற்று முன் தினம் (30.10.2023) நடந்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு நவம்பர் 15-ஆம் தேதி வரை விநாடிக்கு 2600 கன அடி நீர் திறந்துவிடுமாறு கருநாடகா வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்து விட முடியாதென்று கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறினார். இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம் அதன் தலைவர்எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நாளை மறுதினம் 3ஆ-ம் தேதி டில்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கருநாடகா, கேரளா, புதுச் சேரி ஆகிய 4 மாநில அதிகாரிகளுக்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் 13000 கன அடி நீரை திறந்துவிட கருநாடகாவுக்கு உத்தரவிடவேண்டும் என வலியுறுத்த இருப்பதாக தெரிகிறது. கருநாடக அரசு தரப்பில்அணைகளின் நீர் இருப்பு நிலவரத்தை எடுத்துரைத்து அதனை மறுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல மேகே தாட்டுஅணை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க இருப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது.

No comments:

Post a Comment