அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை சிதைத்துள்ளது பாஜக : ராகுல் காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 23, 2023

அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை சிதைத்துள்ளது பாஜக : ராகுல் காந்தி

தோல்பூர்,நவ.23- அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை பாஜக சிதைத்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம் பர் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற பாஜக வும் கடுமையாக மோதி வருகின்றன.

தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டி யுள்ளதால், இரு கட்சி களின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடு பட்டு வருகின்றனர். 

அந்தவகையில் ராஜஸ்தா னின் தோல்பூரில் 22.11.2023 அன்று நடை பெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது, “நாட் டின் வளங்கள் எவ்வாறு பகிரப்பட்டுள்ளன என்று தெரிந்துகொள்வது அவசியமாகும். அந்த வகையில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மற்றும் பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் எவ்வளவு அளிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொள்வ தற்கு ஜாதிவாரி கணக்கெ டுப்பு மிகவும் அவசிய மாகும். 

ராஜஸ்தானில் காங் கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத் தப்படும். அதைத் தொடர்ந்து மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் தேசிய அளவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 

முன்பு தன்னை ஓபிசி என அடையாளப்படுத்தி வந்தார் பிரதமர் மோடி. நான் ஜாதிவாரி கணக்கெ டுப்பை வலியுறுத்த தொடங் கியபின்பு தற்போது நாட் டில் ஏழை என்ற ஒரே ஜாதி மட்டுமே இருப்பதாக மாற்றிப் பேசி வருகிறார்.

கோடிக்கணக்கில் நிரந்தர வேலைவாய்ப்பு களை உருவாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பாஜக இருக்கும் வேலை வாய்ப்புகளையும் குறைத்து வருகிறது. 

நாட்டைக் காப்ப தற்காக கனவுடன் இருந்த இளைஞர்களின் கனவு களை அக்னிபாத் திட்டத் தின் மூலம் பாஜக சிதைத் துள்ளது.'' என்று ராகுல் காந்தி பேசினார்.

No comments:

Post a Comment