ராஜஸ்தானில் நடைபெற்ற அவலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 20, 2023

ராஜஸ்தானில் நடைபெற்ற அவலம்

 பிரதமரின் பொதுக்கூட்ட பாதுகாப்புக்கு சென்ற 

ஆறு காவலர்கள் சாவு

ஜெய்ப்பூர்,   நவ.20  ராஜஸ்தா 

னில் பிரதமரின் பொதுக் கூட்ட பாதுகாப்புக்கு சென்ற  6 காவ லர்கள் விபத்தில் பலியாகினர். இருவர் காயமடைந்தனர்.

ராஜஸ்தானின் நகார் மாவட் டத்தில் பிரதமர் மோடியின் பேரணிக்கு பாதுகாப்பு வழங்குவ தற்காக நகார் மாவட்டத்தின் காவலர் புறப்பட்டு சென்றனர். இதில், ஜுன்ஜுனு பகுதியை நோக்கி சென்றபோது, அவர் களுடைய வாகனம் விபத்தில் சிக்கியது. லாரி ஒன்றுடன் அவர் களுடைய வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயம டைந் தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் பலியானார். உடற்கூராய்விற்குப் பின்னர் அவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி  நிகழ்வுகள் நடந்தன. இந்த சம்பவத்திற்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வருத்தம் தெரிவித்து உள்ளார்.




No comments:

Post a Comment